sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

இந்தியா

/

'சீட்' கேட்பது தவறல்ல அமைச்சர் சதீஷ் கருத்து

/

'சீட்' கேட்பது தவறல்ல அமைச்சர் சதீஷ் கருத்து

'சீட்' கேட்பது தவறல்ல அமைச்சர் சதீஷ் கருத்து

'சீட்' கேட்பது தவறல்ல அமைச்சர் சதீஷ் கருத்து


ADDED : ஜூலை 04, 2024 02:41 AM

Google News

ADDED : ஜூலை 04, 2024 02:41 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஹாவேரி: ''ஷிகாவி இடைத்தேர்தலுக்கு, நாங்கள் இப்போதிருந்தே தயாராகி வருகிறோம்,'' என பொதுப்பணித் துறை அமைச்சர் சதீஷ் ஜார்கிஹோளி தெரிவித்தார்.

ஹாவேரியில் நேற்று அவர் அளித்த பேட்டி:

ஹாவேரியின், ஷிகாவி சட்டசபை தொகுதி இடைத்தேர்தலுக்கு, நாங்கள் இப்போதிருந்தே தயாராகி வருகிறோம். பலர் சீட் எதிர்பார்க்கின்றனர். தகுதியான வேட்பாளருக்கு சீட் கிடைக்கும்.

பிற்படுத்தப்பட்ட பிரிவுகள், லிங்காயத், முஸ்லிம் என, பல சமுதாயத்தினர் சீட் எதிர்பார்க்கின்றனர். வெற்றி பெறும் திறன் கொண்ட வேட்பாளரை தேடி வருகிறோம்.

இடைத்தேர்தலுக்கு இன்னும் நான்கு மாதம் கால அவகாசம் உள்ளது. எனவே, 'கட்சியை பலப்படுத்துங்கள், ஓட்டுகள் பிரியாமல் பார்த்து கொள்ளுங்கள்' என, துணை முதல்வர் சிவகுமார் உத்தரவிட்டுள்ளார். இதன்படி நாங்கள் செயல்படுகிறோம்.

ஷிகாவி தொகுதியில், யாருக்கு சீட் கொடுப்பது என, இன்னும் முடிவு செய்யவில்லை. இது பற்றி மேலிடம் முடிவு செய்யும். சீட் கேட்பது தவறு அல்ல. அனைவருக்கும் சுதந்திரம் உள்ளது. ஆனால் இறுதி முடிவு எடுப்பது முதல்வரும், துணை முதல்வரும், மேலிடமும்தான்.

இவ்வாறு அவர் கூறினார்.






      Dinamalar
      Follow us