sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

இந்தியா

/

'பாவத்தை போக்க பாதயாத்திரை' அமைச்சர் சிவராஜ் தங்கடகி விமர்சனம் 

/

'பாவத்தை போக்க பாதயாத்திரை' அமைச்சர் சிவராஜ் தங்கடகி விமர்சனம் 

'பாவத்தை போக்க பாதயாத்திரை' அமைச்சர் சிவராஜ் தங்கடகி விமர்சனம் 

'பாவத்தை போக்க பாதயாத்திரை' அமைச்சர் சிவராஜ் தங்கடகி விமர்சனம் 


ADDED : ஆக 03, 2024 11:25 PM

Google News

ADDED : ஆக 03, 2024 11:25 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கொப்பால்: ஆட்சியில் இருக்கும்போது, ஊழல் செய்து சேர்த்த பாவத்தை போக்க, பா.ஜ., பாதயாத்திரை நடத்துவதாக, அமைச்சர் சிவராஜ் தங்கடகி விமர்சித்துள்ளார்.

பிற்படுத்தப்பட்டோர் நல அமைச்சர் சிவராஜ் தங்கடகி, கொப்பாலில் நேற்று அளித்த பேட்டி:

பா.ஜ., ஆட்சியில் போவி மேம்பாட்டு ஆணையத்தில், பல கோடி ரூபாய் ஊழல் நடந்தது. அப்போதைய முதல்வர் பசவராஜ் பொம்மை சரியாக விசாரணை நடத்தவில்லை. பா.ஜ., ஆட்சியில் தான் மாநிலத்தில், ஊழல் தலைவிரித்தாடியது.

அவர்கள் ஆட்சியில் நடந்த ஊழல்கள் பற்றி ஏன் பேசுவது இல்லை? தங்களை நல்லவர்கள் என்று காட்டிக் கொள்ள, பாதயாத்திரை நடத்துகின்றனர். அவர்கள் நடிப்பு, மாநில மக்களிடம் செல்லுபடி ஆகாது.

ஊழல் செய்து சேர்த்த பாவத்தை போக்க, பாதயாத்திரை மேற்கொள்கின்றனர். இன்னும் சில நாட்களில் அவர்களின் சாயம் வெளுத்துவிடும். சித்தராமையா மக்களுக்கான முதல்வர். அவரை பதவியில் இருந்து இறக்க வேண்டும் என்று, மாநில மக்கள் நினைக்க மாட்டார்கள்.

முதல்வர் இருக்கையும் தற்போது காலியாக இல்லை. யாத்கிர் எஸ்.ஐ., பசவராஜ் மாரடைப்பால் உயிரிழந்துள்ளார். ஆனால் அவர் தற்கொலை செய்து கொண்டதாக சிலர் பேசுகின்றனர். விசாரணையில் உண்மை வெளிவரும்.

இவ்வாறு அவர் கூறினார்.






      Dinamalar
      Follow us