செப்டம்பரில் புருனே, சிங்கப்பூர் நாடுகளுக்கு மோடி அரசு முறை பயணம்
செப்டம்பரில் புருனே, சிங்கப்பூர் நாடுகளுக்கு மோடி அரசு முறை பயணம்
ADDED : ஆக 30, 2024 09:25 PM

புதுடில்லி: அரசு முறைப்பயணமாக மோடி செப்டம்பரில் புருனே, சிங்கப்பூர் நாடுகளுக்கு பயணம் மேற்கொள்ள உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இது தொடர்பாக இந்திய வெளியுறவு அமைச்சகம் வெளியிட்டுள்ள தகவலில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
இந்தியா -புருனே இடையே நட்புறவு ஏற்பட்டதன் 40-ம் ஆண்டையொட்டி வரும் செப். 03, 04 ம் தேதிகளில் பிரதமர் மோடி அரசு முறைப்பயணமாக புருனே செல்கிறார். அங்கு புருனே சுல்தான் ஹசனல் போல்க்கையாவை சந்தித்து இரு தரப்பு பரஸ்பரம் நட்புறவு குறித்து விவாதிக்கிறார்.
பின்னர் செப். 04, 05ம் தேதிகளில் சிங்கப்பூர் செல்கிறார். இந்தியா -சிங்கப்பூர் இடையேயான நட்புறவை வலுப்படுத்தும் விதமாக ஐ.சி.எம்.ஆர்., எனப்படும் இந்தியா -சிங்கப்பூர் அமைச்சர்கள் மட்டத்திலான வட்டமேசை மாநாடு நடைபெற உள்ளது. மத்திய அமைச்சர்கள் பங்கேற்கின்றனர். இதில் மோடி பங்கேற்கிறார். இவ்வாறு அந்த அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.