UPDATED : மே 13, 2024 08:47 PM
ADDED : மே 13, 2024 08:01 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மஹாராஷ்டிரா மாநிலம் கட்கோபார் பந்த் நகர் ஈஸ்டர்ன் எக்ஸ்பிரஸ் நெடுஞ்சாலையில், மழையுடன் புழுதிப்புயல் வீசியது.இதில் பிரமாண்ட விளம்பரப்பலகை சரிந்து பெட்ரோல் பங்க் மீது விழுந்தது.இதில் மழைக்கு ஒதுங்கிய 54 பேர் காயம்; 100 பேர் உள்ளே சிக்கிக் கொண்டனர். இந்நிலையில் 67 பேர் மீட்கப்பட்டுள்ளனர். தொடர்ந்து மீட்பு பணி நடந்து வருகிறது.
மும்பையில் விமான சேவை நிறுத்தம்
கனமழை மற்றும் புழுதிப்புயல் காரணமாக, மும்பையில் விமான சேவை ஒரு மணி நேரத்துக்கும் மேலாக நிறுத்தம்; உள்ளூர் ரயில் இயக்கத்திலும் தாமதம் ஏற்பட்டுள்ளது.