sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

இந்தியா

/

பிரதமர், முதல்வர் ஆகியோரை சந்திக்க வேண்டும்!

/

பிரதமர், முதல்வர் ஆகியோரை சந்திக்க வேண்டும்!

பிரதமர், முதல்வர் ஆகியோரை சந்திக்க வேண்டும்!

பிரதமர், முதல்வர் ஆகியோரை சந்திக்க வேண்டும்!

1


ADDED : ஜூலை 21, 2024 12:00 AM

Google News

ADDED : ஜூலை 21, 2024 12:00 AM

1


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சொந்த கற்பனையில், ஆங்கில மொழியில் எழுதிய 12 நீதி நெறி கதைகளை தொகுத்து, 'இனியா ஸ்டோரிஸ்' என்ற புத்தகமாக வெளியிட்ட, தஞ்சாவூர் கு.ராமகிருஷ்ணன் -- ரேவதி தம்பதியின் மகளான, ஐந்தாம் வகுப்பு படிக்கும் இனியா:

பள்ளியில், எப்போதும் முன்னணி மாணவியாக தேர்ச்சி பெற்று விடுவேன். ஓவியப் போட்டி, ஹேண்ட் ரைட்டிங் மற்றும் ஸ்பெல்லிங் போட்டி போன்ற பல்வேறு போட்டிகளில் பங்கேற்று பரிசுகளை குவித்திருக்கிறேன். மேடை பேச்சுகளிலும் மிகுந்த ஆர்வம் உண்டு.

நான் ஒன்றாம் வகுப்பு படிக்கும்போது, பள்ளி ஆண்டுவிழா மேடையில், 'மொபைல் போன் அதிக நேரம் பயன்படுத்துவதால் ஏற்படும் பாதிப்புகள்' குறித்து ஆங்கிலத்தில் பேசி, பலருடைய பாராட்டுகளையும் பெற்றேன்.

தமிழ் மொழியின் சிறப்புகள், மரங்கள் வளர்ப்பின் அவசியம், சிறுதானியங்களின் மகத்துவம் உள்ளிட்ட பல்வேறு தலைப்புகளிலும் பேசி கவனம் ஈர்த்துள்ளேன்.

நான் வரைந்த ஓவியங்கள், பிரபல நாளிதழ்களில் வெளியாகியுள்ளன. நான்கா-ம் வகுப்பு படித்தபோது, 40 வினாடிகளில், 60 தமிழ் இலக்கிய நுால்களின் பெயர்களைக் கூறி சாதனை புரிந்தேன்.

கோடை விடுமுறையில் படிக்க, என் பெற்றோர் நிறைய கதை புத்தகங்கள் வாங்கி கொடுத்திருக்கின்றனர். அவற்றை படிக்கும்போது தான், எனக்கும் புத்தகம் எழுத வேண்டும் என்ற எண்ணம் தோன்றியது. இதை அம்மாவிடம் கூறினேன்.

நான் கதை எழுத, அம்மாவும் ஊக்கப்படுத்தினார். 'கதைகள் நன்றாக இருந்தால், புத்தகமாக போடலாம்' என்றார். நான் நன்றாக ஓவியம் வரைவதால், கதைக்கு ஏற்ற ஓவியத்தையும் என்னையே வரைய சொன்னார்.

என் பொழுதுபோக்கு புத்தகம் வாசித்தல், ஓவியம் வரைதல், பாட்டு பாடுதல், செல்ல பிராணிகளுடன் விளையாடுதல் தான். பிரதமர், தமிழக முதல்வர் ஆகியோரை சந்திக்க வேண்டும் என்பது என் ஆசை.

மிகவும் இளம் வயதிலேயே நான் நிகழ்த்தியிருக்கும் சாதனையை கின்னஸ் புத்தகத்தில் இடம்பெற செய்யும் முயற்சிகள் நடந்து வருகின்றன.

மென்மேலும் புத்தகங்கள் எழுத வேண்டும் என்பதும், ஐ.ஏ.எஸ்., அதிகாரியாகி பொதுமக்களுக்கு சேவை செய்ய வேண்டும் என்பதும் தான் என் லட்சியம்.






      Dinamalar
      Follow us