ADDED : ஜூலை 22, 2026 07:03 PM
உறுதி செய்வோம்! டில்லியில் மாணவர்கள், இளைஞர்கள் நடத்தி வரும் போராட்டத்தை தங்களது அரசியல் லாபத்துக்காக சிலர் அரசியல் கருவியாக பயன்படுத்த முயற்சிப்பது மிகவும் கண்டிக்கத்தக்கது. சில சமூக விரோதிகள் மாணவர்களை தவறாக வழிநடத்துகின்றனர். மாணவர்களுக்கு நீதி கிடைப்பதை நாங்கள் உறுதி செய்வோம். ராஜ்நாத் சிங் ராணுவ அமைச்சர், பா.ஜ.,
இது என்ன நியாயம்? மாணவர்கள், இளைஞர்கள் பிரச்னைகள் குறித்து பார்லி.,யில் பேச அனுமதிப்பதில்லை. அது குறித்து விவாதம் நடத்தவும் அரசு தயாராக இல்லை. விவாதம் நடத்தலாமா என, மத்திய அமைச்சர்களிடம் லோக்சபா சபாநாயகர் ஓம் பிர்லா கேட்கிறார். இது என்ன நியாயம்? நம் நாட்டில் ஜனநாயகம் முடிவுக்கு வந்து விட்டது. பிரியங்கா லோக்சபா எம்.பி., – காங்கிரஸ்
பா.ஜ.,வுடன் ராகுல் கூட்டணி! மாணவர்களின் போராட்டத்தை பலவீனப்படுத்த காங்கிரசைச் சேர்ந்த லோக்சபா எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் முயற்சிக்கிறார். ஒரு மாத காலம் அமைதியாக இருந்த அவர், அரசியல் லாபத்துக்காக மக்களின் கவனத்தை தன் பக்கம் திருப்ப முயற்சிக்கிறார். பா.ஜ.,வுடன் கூட்டு சேர்ந்து போராட்டத்தை அவர் நசுக்க பார்க்கிறார். சஞ்சய் சிங் ராஜ்யசபா எம்.பி., – ஆம் ஆத்மி கட்சி
