ADDED : ஏப் 09, 2024 12:39 AM

கைதுக்கு பயந்த நிர்வாகிகள்!
மத்திய விசாரணை அமைப்புகளிடம் இருந்து நோட்டீஸ் வந்தவுடன், காங்கிரசில் இருந்த சில நிர்வாகிகள் பா.ஜ.,விடம் சரணடைந்து விட்டனர். கைது நடவடிக்கையில் இருந்து தப்பிப்பதற்காகவே, அவர்கள் பா.ஜ.,வில் இணைந்துள்ளனர்.
வேணுகோபால்
பொதுச்செயலர், காங்.,
பதில் சொல்லுங்க ராகுல்!
கேரளாவின் வயநாடு தொகுதியில் போட்டியிட, தடை செய்யப்பட்ட பி.எப்.ஐ., அமைப்பின் ஆதரவை, ராகுல் பெற்றுள்ளதாக எங்களுக்கு தகவல் கிடைத்துள்ளது. அந்த பயங்கரவாத அமைப்பின் ஆதரவை பெற்றதற்கான காரணத்தை அவர் கூற வேண்டும்.
ஸ்மிருதி இரானி
மத்திய அமைச்சர், பா.ஜ.,
தெளிவுபடுத்த வேண்டும்!
பெரும்பான்மை சமூகத்திற்கு எதிராக காங்., செயல்படுகிறது. இட ஒதுக்கீடு உச்ச வரம்பை, 50 சதவீதத்தில் இருந்து உயர்த்துவதாக உறுதி அளிப்பதன் வாயிலாக, யாருக்கு ஆதாயம் கிடைக்கும் என்பதை எதிர்க்கட்சிகள் தெளிவுபடுத்த வேண்டும்.
நட்டா
தேசிய தலைவர், பா.ஜ.,
