
பிளவுபடுத்தும் அரசியல்!
லோக்சபா தேர்தலில், பா.ஜ., வெற்றி பெற்று மீண்டும் ஆட்சிக்கு வந்தால், நம் நாடு 15 ஆண்டுகள் பின்னோக்கிச் சென்று விடும். விலைவாசி உயர்வு போன்ற உண்மையான பிரச்னைகளில் இருந்து கவனத்தை திசை திருப்ப, அக்கட்சி பிரித்தாளும் அரசியலில் ஈடுபடுகிறது.
டிம்பிள் யாதவ்
எம்.பி., - சமாஜ்வாதி
மண்டியிட்ட காங்கிரஸ்
மத்திய பிரதேசம் உட்பட நாடு முழுதும், மோடியின் அலை வீசுகிறது. இதை யாராலும் மறுக்க முடியாது. ம.பி.,யில் காங்., என்ற கட்சி இருக்கிறதா என்பதே, மாநில மக்களுக்கு தெரியவில்லை. மாநிலத்தில், காங்., மண்டியிட்டு விட்டது.
மோகன் யாதவ்
ம.பி., முதல்வர், பா.ஜ.,
மோடியின் கைப்பாவை!
ஆந்திராவில் கடந்த ஐந்து ஆண்டுகளாக, பிரதமர் நரேந்திர மோடியின் கைப்பாவையாக, முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி செயல்படுகிறார். அவர் என்ன செய்ய சொல்கிறாரோ, அதை அப்படியே ஜெகன் மோகன் செய்து முடிக்கிறார். இருவருக்கும் இடையே ரகசிய டீலிங் உள்ளது.
ஒய்.எஸ்.ஷர்மிளா
காங்., தலைவர், ஆந்திரா