
ராகுல் உளறுகிறார்!
நாட்டின் பாதுகாப்பு, அக்னிவீர் திட்டம் தொடர்பாக, நாட்டு மக்களிடையே தவறான கருத்துகளை ராகுல் பரப்பி வருகிறார். இதுகுறித்து பார்லி.,யில் அறிக்கை வெளியிட தயாராக இருக்கிறேன். பட்ஜெட் குறித்தும் வாய்க்கு வந்தபடி அவர் உளறுகிறார்.
ராஜ்நாத் சிங்
ராணுவ அமைச்சர், பா.ஜ.,
அவசியத்தை உணராத பிரதமர்!
மணிப்பூரில் வன்முறையை கட்டுப்படுத்த, மத்திய பா.ஜ., அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. அங்கு அமைதியை மீட்டெடுக்கவும் முயற்சிக்கவில்லை. மணிப்பூர் மக்களுக்கு ஆறுதல் கூற வேண்டிய அவசியத்தைக் கூட பிரதமர் மோடி உணரவில்லை.
சரத் பவார்
தலைவர், தேசியவாத காங்.,
சரத் சந்திர பவார்
ஊழலை அம்பலப்படுத்துவோம்!
கர்நாடகாவில் பழங்குடியின மக்களின் நலனுக்கான பணத்தை, காங்., அரசு கொள்ளை அடித்துள்ளது. இந்த பெரிய ஊழலில் முதல்வர் சித்தராமையா ஈடுபட்டுள்ளார். இந்த ஊழலை, பா.ஜ., - மதச்சார்பற்ற ஜனதா தள நிர்வாகிகள் அம்பலப்படுத்துவர்.
அசோக்
கர்நாடக எதிர்க்கட்சி தலைவர், பா.ஜ.,

