
ஒரு போதும் மன்னிக்காதீர்கள்!
ராமர் கோவில் கும்பாபிஷேகத்தில் ராகுலும், திக்விஜய் சிங்கும் ஏன் பங்கேற்கவில்லை தெரியுமா? அவர்களின் ஓட்டு வங்கி கைவிட்டு போய்விடும் என நினைத்து அஞ்சினர். இவர்களை மக்கள் ஒருபோதும் மன்னிக்க மாட்டார்கள்.
அமித் ஷா
மத்திய உள்துறை அமைச்சர்,
பா.ஜ.,
கண்ணீர் சிந்துவார்!
பிரதமரின் பேச்சுக்களை கவனிக்கும் போது, அவர் பயத்தில் இருக்கிறார் என்பது புரிகிறது. மக்களின் கவனத்தை முக்கிய பிரச்னைகளில் இருந்து திசை திருப்ப முயற்சிக்கிறார். அடுத்து அவர் மேடையில் கண்ணீர் சிந்தி அழுதாலும் அழுவார்.
ராகுல்
லோக்சபா எம்.பி., - காங்.,
காங்கிரசை தண்டியுங்கள்!
காங்கிரஸ் தன் தேர்தல் அறிக்கையில், ஆட்சிக்கு வந்தால் பெரும்பான்மைவாதத்தை முடிவுக்கு கொண்டு வருவோம் என கூறியுள்ளது. எனவே, பெரும்பான்மை மக்கள் காங்கிரசை தண்டிக்க வேண்டும்.
கேசவ் மவுரியா
உ.பி., துணை முதல்வர்,
பா.ஜ.,

