
கச்சத்தீவால் அச்சம்!
தேர்தல் பிரசாரத்தின் போது பிரதமரும், அமைச்சர்களும் கச்சத்தீவு குறித்து பேசி பிரச்னையை உருவாக்கியது பொறுப்பற்ற செயல். இதனால் இலங்கையுடனான உறவில் பாதிப்பு ஏற்பட்டது. தற்போது இவர்கள் மன்னிப்பு கேட்பார்களா?
ஜெய்ராம் ரமேஷ்
பொதுச் செயலர், காங்கிரஸ்
அடுத்த ஆட்சி நமதே!
இந்த ஆண்டு இறுதியில் நடக்க உள்ள மஹாராஷ்டிரா சட்டசபை தேர்தலுக்கு தொண்டர்கள் அனைவரும் தயாராக இருங்கள். இலக்கை நோக்கி ஒருங்கிணைந்து செயல்பட்டால் நாளைய ஆட்சி நம் கைகளில்.
சரத் பவார்
தலைவர், தேசியவாத காங்கிரஸ் சரத்பவார் பிரிவு
100 தொகுதி இலக்கு!
வரும் 2026ல் அசாமின் 126 தொகுதிகளுக்கும் நடக்க உள்ள சட்டசபைத் தேர்தலில் பா.ஜ., மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் 90 முதல் 100 இடங்களில் வெல்லும். நடந்து முடிந்த லோக்சபா தேர்தல் முடிவுகளும் அதையே கூறுகின்றன.
ஹிமந்த பிஸ்வ சர்மா
அசாம் முதல்வர், பா.ஜ.,