
அரசிடம் பணமில்லையா?
மத்திய அரசு இந்தியாவை சக்திவாய்ந்த உலகப் பொருளாதாரமாக மாற்றி வருவதாக கூறுகிறது. ஆனால் மத்திய அரசு ஊழியர்களுக்கு 18 மாத அகவிலைப்படி பாக்கியை தர மறுக்கிறது. அதிகரித்து வரும் ஜி.எஸ்.டி., வசூல் வாயிலாக சேரும் பணம் எங்கு செல்கிறது என்பதை அரசு தெரிவிக்க வேண்டும்.
அகிலேஷ் யாதவ்
தலைவர், சமாஜ்வாதி
விரைவில் இந்தியா மூன்றாமிடம்!
இந்தியாவின் பொருளாதாரம் 35 ஆண்டுகளுக்கு முன் லண்டன், பாரிஸ் போன்ற நகரங்களின் பொருளாதாரத்தை விடவும் குறைவாக இருந்தது. இன்று நாம் உலகின் ஐந்தாவது பெரிய பொருளாதாரமாக உள்ளோம். இரண்டாண்டுகளில் நாம் மூன்றாம் இடத்தை எட்டுவோம். இந்த எழுச்சியை தடுக்க முடியாது.
ஜக்தீப் தன்கர்
துணை ஜனாதிபதி
வங்கதேசத்தால் கவலை!
முந்தைய வங்கதேச அரசுடன் வடகிழக்கு மாநிலங்களுக்கு நல்ல ஒத்துழைப்பு இருந்தது. இதனால், இப்பகுதியில் பயங்கரவாத நடவடிக்கைகள் மற்றும் ஊடுருவல்கள் தடுக்கப்பட்டன. தற்போது வங்கதேசத்தில் நிலைமை சரியில்லை. இதேநிலை நீடித்தால் அது வடகிழக்கு மாநிலங்களை பாதிக்கும்.
ஹிமந்த பிஸ்வ சர்மா
அசாம் முதல்வர், பா.ஜ.,