sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், நவம்பர் 06, 2025 ,ஐப்பசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

இந்தியா

/

சுதந்திர தின விழாவில் நேதாஜி சிலை அவமதிப்பு?

/

சுதந்திர தின விழாவில் நேதாஜி சிலை அவமதிப்பு?

சுதந்திர தின விழாவில் நேதாஜி சிலை அவமதிப்பு?

சுதந்திர தின விழாவில் நேதாஜி சிலை அவமதிப்பு?


ADDED : ஆக 16, 2024 10:54 PM

Google News

ADDED : ஆக 16, 2024 10:54 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

தங்கவயல் : தங்கவயல் நகராட்சி திடலில் அரசு விழாவாக சுதந்திர தின விழா நேற்று முன்தினம் கொண்டாடப் பட்டது. விழா நடந்த இடத்தின் அருகே உள்ள நேதாஜி சிலைக்கு யாரும் மாலை அணிவிக்கவில்லை. இதை, விழா ஏற்பாட்டாளர்களும் கண்டுகொள்ளவில்லை.

தங்கவயலில், சுதந்திர தின விழா நடைபெற்ற நகராட்சி திடலுக்கும், நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் சிலை உள்ள பூங்காவுக்கும் 50 அடி துாரம் கூட இல்லை.

சுதந்திர தின விழாவை ஏற்பாடு செய்த நகராட்சி, மற்றும் தாலுகா நிர்வாகம் அவரின் சிலைக்கு மாலை அணிவிக்காமல் அலட்சியம் காட்டியது. இதனால் மாணவர்கள், தேசபக்தர்கள் பெரிதும் அதிருப்தி அடைந்தனர். தேச விடுதலை போரில் முக்கிய பங்கு வகித்த நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் சிலையை நிறுவியவர்கள் மிகவும் வருந்தினர்.

சுதந்திர தின விழாவையொட்டி தேசப் பிதா காந்தியடிகள், சட்டப் பிதா அம்பேத்கர் ஆகியோரின் சிலைகளுக்கு மாலைகள் அணிவித்தவர்கள், நேதாஜி சிலையை கண்டு கொள்ளாதது தேச துரோகம் போன்றது என, சிலையை நிறுவியவர்கள் வருந்தினர்.

'இனி, சுதந்திர தினம், குடியரசு தினம் ஆகிய நாட்களில் நேதாஜி சிலைக்கும் மாலை அணிவிக்க வேண்டும்' என்று கோலார் கலெக்டர், தங்கவயல் தாசில்தார், நகராட்சி ஆணையர் ஆகியோரிடம் கோரிக்கை மனு அளித்தனர்.






      Dinamalar
      Follow us