sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், டிசம்பர் 25, 2025 ,மார்கழி 10, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

இந்தியா

/

சிறுபான்மையினருக்கு எதிராக ஒருவார்த்தைக் கூட பேசியதில்லை: பிரதமர் மோடி சொல்கிறார்!

/

சிறுபான்மையினருக்கு எதிராக ஒருவார்த்தைக் கூட பேசியதில்லை: பிரதமர் மோடி சொல்கிறார்!

சிறுபான்மையினருக்கு எதிராக ஒருவார்த்தைக் கூட பேசியதில்லை: பிரதமர் மோடி சொல்கிறார்!

சிறுபான்மையினருக்கு எதிராக ஒருவார்த்தைக் கூட பேசியதில்லை: பிரதமர் மோடி சொல்கிறார்!

7


UPDATED : மே 20, 2024 03:51 PM

ADDED : மே 20, 2024 12:07 PM

Google News

UPDATED : மே 20, 2024 03:51 PM ADDED : மே 20, 2024 12:07 PM

7


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

புதுடில்லி: 'சிறுபான்மையினருக்கு எதிராக இதுவரை நான் ஒருவார்த்தைக் கூட பேசியதில்லை' என பிரதமர் மோடி திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.

இது குறித்து பி.டி.ஐ., செய்தி நிறுவனத்திற்கு பிரதமர் மோடி அளித்த பேட்டி: அம்பேத்கர் முதல் நேரு வரை மத அடிப்படையில் இட ஒதுக்கீடு வழங்குவதற்கு எதிர்ப்பு தெரிவித்தனர். மத அடிப்படையில் இட ஒதுக்கீடு வழங்க கூடாது. காங்கிரசின் ஓட்டு வங்கி அரசியலைத் தான், நான் எதிர்த்து வருகிறேன். சிறுபான்மையினருக்கு எதிராக நான் ஒரு வார்த்தை கூட இதுவரை பேசியதில்லை. சிறுபான்மையினருக்கு எதிராக பா.ஜ., ஒரு நாளும் செயல்பட்டதில்லை.

400 தொகுதிகள்

அரசியலமைப்பு சட்டத்தை உருவாக்கியவர்கள் நோக்கத்தை சிதைக்கும் காங்கிரஸ் முயற்சியை மக்களிடையே நான் அம்பலப்படுத்துகிறேன். இந்த முறை தென் மாநிலங்களில் பா.ஜ., மிகப்பெரிய கட்சியாக உருவெடுக்கும். தே.ஜ., கூட்டணி 400 தொகுதிகளில் வெற்றி பெறும். தென் மாநிலங்களில் பா.ஜ., மற்றும் அதன் கூட்டணிக் கட்சிகள் அதிக தொகுதிகளில் வெல்லும்.

ஒடிசாவில் பா.ஜ., ஆட்சி

பிஜூ ஜனதா தளம் கட்சி ஆட்சியில் பூரியில் உள்ள ஜெகநாதர் கோயில் பாதுகாப்பு கேள்விகுறியாகி உள்ளது. கடந்த 6 ஆண்டுகளாக கோயில் சாவி காணவில்லை. ஒடிசாவில் கனிமங்கள் கொள்ளை நடக்கிறது. ஒடிசா மாநிலம் இயற்கை வளங்கள் நிறைந்து காணப்படுகிறது. ஆனால் அங்கு வறுமை நிலவுகிறது.

இதனை கண்டு வேதனை அடைகிறேன். ஒடிசாவில் முதன்முறையாக பா.ஜ., ஆட்சி அமைய உள்ளது. ஒடிசாவில் லோக்சபா மற்றும் சட்டசபை தேர்தலில் வெற்றி பெறுவோம். இவ்வாறு பிரதமர் மோடி பேசினார்.

ஜூன் 10ம் தேதி பதவியேற்பு விழா

ஒடிசா மாநிலம் தென்கனல் பகுதியில் நடந்த பொதுக்கூட்டத்தில் மோடி பேசியதாவது: பா.ஜ., அரசை மூன்றாவது முறையாக மீண்டும், ஆட்சிக்கு கொண்டு வர மக்கள் அனைவரும் விரும்புவது, அவர்கள் அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.
ஒடிசாவின் மகன் அல்லது மகளை மட்டுமே பா.ஜ., முதல்வராக்கும். ஒடிசாவில் ஜூன் 10ம் தேதி பா.ஜ,, ஆட்சியின் பதவியேற்பு நிகழ்ச்சி நடைபெற உள்ளது. என்னைப் பொறுத்தவரை அரசியலமைப்புச் சட்டமே ஆட்சிக்கான மிகப்பெரிய வேதம். அரசியல்வாதியாகவும், மக்கள் பிரதிநிதியாகவும் எனக்கு அரசியல் சட்டம் தான் வழிகாட்டி. இவ்வாறு பிரதமர் மோடி பேசினார்.



வழிபாடு

முன்னதாக, புரி சென்ற பிரதமர் நரேந்திர மோடி அங்கு ஜகந்நாதரை வழிபட்டார். இதையடுத்து, புரியில் நடைபெற்ற ரோட் ஷோவில் பிரதமர் மோடி பங்கேற்றார்.








      Dinamalar
      Follow us