புதிய 'ஐ.டி., கொள்கை - 2025' 5 லட்சம் வேலை வாய்ப்புகள்
புதிய 'ஐ.டி., கொள்கை - 2025' 5 லட்சம் வேலை வாய்ப்புகள்
ADDED : மார் 08, 2025 02:15 AM
* பெங்களூரு தவிர, மற்ற நகரங்களிலும் தொழில்நுட்பத்தை ஊக்கப்படுத்த, 1,000 கோடி ரூபாய் செலவில், 'பொருளாதார ஆக்சிலேட்டர் திட்டம்' செயல்படுத்தப்படும். நடப்பாண்டு திட்டத்துக்கு 200 கோடி ரூபாய் வழங்கப்படும். இதனால் மாநிலம் முழுதும், ஐந்து லட்சம் புதிய வேலை வாய்ப்புகள் உருவாகும்.
* முதலீடுகளை ஈர்க்கும் நோக்கில், தகவல் தொழில் நுட்பத்தை ஊக்கப்படுத்த பல்வேறு கொள்கைகள் செயல்படுத்தப்படுகின்றன.
* தகவல் தொழில் நுட்பத்தை, மேலும் பலப்படுத்த புதிய 'ஐ.டி., கொள்கை - 2025' செயல்படுத்தப்படும்.
* கர்நாடகாவை ஆர்ட்டிபிஷியல் இன்டலிஜென்ட் துறையில் மேம்படுத்த அடுத்த 5 ஆண்டுகளுக்கு 50 கோடி ரூபாய்.
* 'குவான்டம்' தொழில் நுட்பத்தை மேம்படுத்த, 48 கோடி ரூபாய் வழங்கப்படும்.
* கர்நாடக உயிரியல் தொழில்நுட்ப தொழிலில், 1,500 கோடி ரூபாய் முதலீட்டை ஈர்க்க திட்டம்.
* தீ விபத்தில் சேதமடைந்த பெங்களூரு பயோ - இன்னோவேஷன் சென்டர், 57 கோடி ரூபாய் செலவில் மறு சீரமைக்கப்படும். நடப்பாண்டு 20 கோடி ரூபாய் நிதி வழங்கப்படும்.
* பெங்களூரு, மைசூரு, தார்வாட், பெலகாவி மாவட்டங்களில், 'கியோனிக்ஸ்' மூலம் 'குளோபல் இன்னோவேஷன் டிஸ்ட்ரிக்ட்' மேம்படுத்தப்படும்.
* கோலார், ராம்நகர், சித்ரதுர்கா, விஜயநகர் மாவட்டங்களில், 9 கோடி ரூபாய் புதிதாக துணை மண்டல அறிவியல் மையங்கள்.
* மைசூரில் 150 ஏக்கரில், அதி நவீன பிரின்டடு சர்க்யூட் போர்டு அமைக்கப்படும்.
* தொழிற்சாலைகள் மற்றும் மத்திய அரசின் ஒருங்கிணைப்பில், ஒன்பது கோடி ரூபாய் செலவில், சென்சர் டெக் இன்னோவேஷன் ஹப்.
* கியோனிக்ஸ் சார்பில் மங்களூரு, ஹூப்பள்ளி, பெலகாவியில், பிளக் அண்ட் ப்ளே வசதி கொண்ட மூன்று புதிய தொழில்நுட்ப மையங்கள்.
* விவசாயத்துறையில் நவீன தொழில் நுட்பத்தை ஊக்கப்படுத்த Agri - tech Accelerator அமைக்கப்படும்.
* கலபுரகியில் பிளக் அண்ட் ப்ளே வசதி கொண்ட Flat Factory அமைக்கப்படும்.