sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, டிசம்பர் 14, 2025 ,கார்த்திகை 28, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

இந்தியா

/

மாநிலத்தைவிட்டு வெளியேற வேண்டிய அவசியமில்லை: பிரசாந்த்கிஷோர்

/

மாநிலத்தைவிட்டு வெளியேற வேண்டிய அவசியமில்லை: பிரசாந்த்கிஷோர்

மாநிலத்தைவிட்டு வெளியேற வேண்டிய அவசியமில்லை: பிரசாந்த்கிஷோர்

மாநிலத்தைவிட்டு வெளியேற வேண்டிய அவசியமில்லை: பிரசாந்த்கிஷோர்

5


ADDED : ஆக 25, 2024 10:01 PM

Google News

ADDED : ஆக 25, 2024 10:01 PM

5


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பாட்னா: வரும் 2025-ல் மாநில தேர்தலில் தங்களின் கட்சி ஆட்சி அமைந்தால் யாரும் மாநிலத்தை விட்டு வெளியே போக வேண்டிய அவசியம் இருக்காது என பிரசாந்த் கிஷோர் தெரிவித்து உள்ளார்.

தேர்தல் வெற்றி வியூக மன்னனாக கருதப்படும் பிரசாந்த் கிஷோர் ஜன் சுராஜ் என்ற பெயரில் தனி கட்சி துவக்கி உள்ளார். வரும் 2025 -ல் நடைபெற உள்ள மாநில சட்டசபை தேர்தலில் போட்டியிட முடிவு செய்துள்ளார்.

இதனிடையே பாட்னா நகரில் நடைபெற்ற பெண்கள் மாநாட்டில் வரும் தேர்தலில் மொத்தம் உள்ள 243 இடங்களிலும் வேட்பாளர்கள் போட்டியிடுவர். இதில் 40 தொகுதிகள் வரையில் பெண்கள் நிறுத்தப்படுவர்.

பெண்களின் முன்னேற்றத்திற்காக மாநிலத்தில் செயல்பட்டு வரும் ஜீவிகா திதிஸ் என்ற நிதி உதவி அமைப்பிடம் பெறப்படும் வட்டியை விட குறைவான கட்டணத்தில் நிதி உதவி வழங்கப்படும்.

பெண்களுக்கு பொருளாதார சுதந்திரம் கிடைக்காத வரையில், அவர்களுக்கு அரசாங்கத்தில் சமமான பங்கேற்பு என்பது சாத்தியமில்லை .ஜன் சூராஜ் அரசு அமைந்ததும், பீகாரில் இருந்து யாரும் வெளியேற வேண்டிய கட்டாயம் இல்லை. இதற்காக 10,000 முதல் 12,000 வேலைகள் வரை உள்ள விரிவான திட்டத்தை நாங்கள் தயார் செய்துள்ளோம்.

வரும் 2025 சட்டசபை தேர்தலில் மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பை சேர்ந்த 75 பேர் களமிறக்கப்படுவர் என அவர் கூறினார்.






      Dinamalar
      Follow us