ADDED : மே 03, 2024 01:22 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
புதுடில்லி, இந்திய மல்யுத்த சம்மேளனத்தின் தலைவராக 10 ஆண்டுகள் இருந்த பா.ஜ., - எம்.பி., பிரிஜ் பூஷன் சரண் சிங் மீது, முன்னணி மல்யுத்த வீராங்கனையர் பாலியல் குற்றச்சாட்டுகளை முன்வைத்தனர்.
இதையடுத்து, மல்யுத்த சம்மேளன தலைவர் பதவியில் இருந்து பிரிஜ் பூஷன் சிங் விலகினார்.
உத்தர பிரதேசத்தின் கைசர்கஞ்ச் தொகுதியின் சிட்டிங் எம்.பி.,யான அவர் மீதான குற்றச்சாட்டு பா.ஜ.,வுக்கு பின்னடைவை ஏற்படுத்தியது.
இந்நிலையில், பிரிஷ் பூஷன் மீதான குற்றச்சாட்டு காரணமாக, அவக்கு பதிலாக, அவரது மகன் கரண் பூஷனுக்கு கைசர்கஞ்ச் இந்த முறை பா.ஜ., வாய்ப்பளித்துள்ளது.
அதேபோல், ரேபரேலி தொகுதி வேட்பாளராக தினேஷ் பிரதாப் சிங் அறிவிக்கப்பட்டுஉள்ளார்.