sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், அக்டோபர் 07, 2025 ,புரட்டாசி 21, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

இந்தியா

/

புற்று நோய் குணம் அடைந்தது எப்படி; ரூ.850 கோடி கேட்டு சித்து மனைவிக்கு நோட்டீஸ்

/

புற்று நோய் குணம் அடைந்தது எப்படி; ரூ.850 கோடி கேட்டு சித்து மனைவிக்கு நோட்டீஸ்

புற்று நோய் குணம் அடைந்தது எப்படி; ரூ.850 கோடி கேட்டு சித்து மனைவிக்கு நோட்டீஸ்

புற்று நோய் குணம் அடைந்தது எப்படி; ரூ.850 கோடி கேட்டு சித்து மனைவிக்கு நோட்டீஸ்

26


UPDATED : நவ 29, 2024 08:42 PM

ADDED : நவ 29, 2024 10:39 AM

Google News

UPDATED : நவ 29, 2024 08:42 PM ADDED : நவ 29, 2024 10:39 AM

26


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ராய்ப்பூர்: உணவுக் கட்டுப்பாடு மற்றும் பாரம்பரிய சிகிச்சையால் புற்றுநோய் முற்றிலும் குணமடைந்து விட்டதாக கூறிய விவகாரத்தில், இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் நவ்ஜோத் சிங் சித்து மனைவிக்கு ரூ.850 கோடி நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் நவ்ஜோத் சிங் சித்து, தனது மனைவி கவுர் புற்றுநோய் சிகிச்சை முறை குறித்து கூறியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள வீடியோவில், தனது மனைவி புற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், அவர் உயிர் பிழைப்பதற்கு 5 சதவீதமே வாய்ப்பு இருப்பதாக டாக்டர்கள் கூறிய நிலையில், 40 நாள் சிகிச்சைக்குப் பிறகு டிஸ்சார்ஜ் ஆகி வீடு திரும்பியதாகவும் கூறினர்.

அதன்பிறகு, கடுமையான உணவு கட்டுப்பாடுகளின் மூலம், புற்றுநோயில் இருந்து தனது மனைவி குணமடைந்து விட்டதாகவும், மஞ்சள், வேப்பம் தண்ணீர், ஆப்பிள் வினிகர், எலுமிச்சை தண்ணீர் சாப்பிட்டதாகவும், சர்க்கரையை முழுவதுமாக தவிர்த்த உணவுகளையே சாப்பிட்டதாகவும் கூறியிருந்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

அவரது இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலான நிலையில், இதுபோன்ற ஆதாரமற்ற மருத்துவ முறைகளை மேற்கொள்ளக் கூடாது என்று டாக்டர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.

இந்த நிலையில், நவ்ஜோத் கவுர் சித்துவுக்கு சத்தீஸ்கர் சிவில் சமூகம் என்ற அமைப்பினர், நோட்டீஸ் அனுப்பியுள்ளார். அதில், புற்றுநோயில் இருந்து குணமடைந்ததற்கான சிகிச்சை முறைகள் குறித்த ஆதாரத்தை வெளியிட வேண்டும் என்றும், அப்படி இல்லையெனில், மன்னிப்பு கேட்டு விட்டு, ரூ.850 கோடியை பி.எம்.,கேர் நிதிக்கு செலுத்த வேண்டும் என்று குறிப்பிட்டிருந்தனர்.

இது தொடர்பாக உரிய பதிலளிக்காவிட்டால் சட்டப்பூர்வமாக நடவடிக்கை எடுக்கப்படும் என்று சத்தீஸ்கர் சிவில் சமூகத்தின் ஆலோசகர் குல்திப் சோலான்கி தெரிவித்துள்ளார்.

நாடு முழுவதும் பல்வேறு துறைகளைச் சேர்ந்த 2,000க்கும் மேற்பட்டோர் சத்தீஸ்கர் சிவில் சமூகத்தின் உறுப்பினர்களாக இருந்து வருவது குறிப்பிடத்தக்கது.






      Dinamalar
      Follow us