sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், டிசம்பர் 22, 2025 ,மார்கழி 7, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

இந்தியா

/

சாலையில் குப்பை வீசியதை தட்டிக்கேட்ட முதியவர் கொலை

/

சாலையில் குப்பை வீசியதை தட்டிக்கேட்ட முதியவர் கொலை

சாலையில் குப்பை வீசியதை தட்டிக்கேட்ட முதியவர் கொலை

சாலையில் குப்பை வீசியதை தட்டிக்கேட்ட முதியவர் கொலை

1


ADDED : ஆக 10, 2024 06:32 AM

Google News

ADDED : ஆக 10, 2024 06:32 AM

1


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மாதநாயக்கனஹள்ளி: சாலையில் குப்பை வீசியதை தட்டி கேட்ட, முதியவரை கத்தியால் கழுத்தை அறுத்து கொன்ற வாலிபர் கைது செய்யப்பட்டார்.

துமகூரு ஷிராவை சேர்ந்தவர் புனித், 24. பெங்களூரு ரூரல் நெலமங்களா அருகே மாதநாயக்கனஹள்ளியில் வாடகை வீட்டில் தாயுடன் தங்கி இருந்து, தொழிற்சாலையில் வேலை செய்தார்.

நேற்று காலை 9:00 மணிக்கு, வீட்டின் அருகே உள்ள சாலையில் குப்பை வீசியதுடன், குட்காவை மென்று எச்சிலை துப்பினார். அந்த வழியாக நடந்து சென்ற சித்தப்பா, 70 என்பவர், புனித்தை தட்டி கேட்டார்.

கோபம் அடைந்த புனித், சித்தப்பாவிடம் தகராறில் ஈடுபட்டார். பின், வீட்டிற்குள் சென்று கத்தியை எடுத்து வந்து, சித்தப்பாவின் கழுத்தை அறுத்தார்.

ரத்தவெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே சித்தப்பா இறந்தார். பட்டப்பகலில் நடந்த கொலையை பார்த்து, அப்பகுதி மக்கள் அதிர்ச்சி அடைந்தனர். புனித்தை பிடிக்க முயன்றனர். ஆனால் அவர் தப்பி சென்று விட்டார்.

சிக்கபிதரகல்லுவில் உள்ள சகோதரர் வீட்டில் பதுங்கி இருந்த புனித்தை நேற்று மாலை, மாதநாயக்கனஹள்ளி போலீசார் கைது செய்தனர்.

கொலையான சித்தப்பா, தனியார் மருந்து நிறுவனத்தில் பணியாற்றி ஓய்வு பெற்றவர். அவர் பெயரில் 10 வீடுகள் உள்ளன. அந்த வீடுகளை வாடகைக்கு வீட்டு வாழ்க்கை நடத்தி வந்தார்.






      Dinamalar
      Follow us