sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், நவம்பர் 05, 2025 ,ஐப்பசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

இந்தியா

/

உயிரிழந்த தொழிலாளியின் உடல் உறுப்புகள் தானம்

/

உயிரிழந்த தொழிலாளியின் உடல் உறுப்புகள் தானம்

உயிரிழந்த தொழிலாளியின் உடல் உறுப்புகள் தானம்

உயிரிழந்த தொழிலாளியின் உடல் உறுப்புகள் தானம்


ADDED : ஜூலை 25, 2024 10:57 PM

Google News

ADDED : ஜூலை 25, 2024 10:57 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மைசூரு: விபத்தில் சிக்கி உயிரிழந்த தொழிலாளியின் உடல் உறுப்புகள் தானம் செய்யப்பட்டுள்ளது.

மைசூரு கூர்ஹள்ளி கிராமத்தை சேர்ந்தவர் சந்துரு, 39; கூலித்தொழிலாளி. கடந்த 19ம் தேதி காலை, ஹெப்பால் தொழிற்பேட்டை அருகே பைக்கில் சென்றார்.

அப்போது எதிரே வந்த லாரி, பைக் மீது மோதியது. தலையில் படுகாயம் அடைந்து உயிருக்கு போராடிய சந்துரு, மைசூரு தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

அவருக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தனர். சிகிச்சை பலன் அளிக்காமல் நேற்று முன்தினம் இரவு மூளைச்சாவு அடைந்தார்.

சந்துருவின் உடல் உறுப்புகளை தானம் செய்ய குடும்பத்தினர் முடிவு செய்தனர்.

அறுவை சிகிச்சை மூலம் சந்துருவின் கல்லீரல், சிறுநீரகம், கருவிழி எடுக்கப்பட்டு நான்கு பேருக்கு பொருத்தப்பட்டது.

உடல் உறுப்பு தானம் மூலம், நான்கு பேரின் வாழ்வில் ஒளி ஏற்றிய சந்துருவின் குடும்பத்தினருக்கு, டாக்டர்கள் நன்றி தெரிவித்தனர்.






      Dinamalar
      Follow us