sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

இந்தியா

/

சித்தராமையாவுடன் பவன் கல்யாண் சந்திப்பு

/

சித்தராமையாவுடன் பவன் கல்யாண் சந்திப்பு

சித்தராமையாவுடன் பவன் கல்யாண் சந்திப்பு

சித்தராமையாவுடன் பவன் கல்யாண் சந்திப்பு


ADDED : ஆக 08, 2024 11:58 PM

Google News

ADDED : ஆக 08, 2024 11:58 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பெங்களூரு: ஆந்திர துணை முதல்வரும், நடிகருமான பவன் கல்யாண், பெங்களூரில் முதல்வர் சித்தராமையாவை சந்தித்து பேசினார்.

கர்நாடக வனத்துறை அமைச்சர் ஈஸ்வர் கன்ட்ரே தலைமையில், பெங்களூரின் விதான் சவுதாவில், நேற்று மதியம் ஆலோசனை கூட்டம் நடந்தது. காட்டு யானைகளின் தொல்லையை கட்டுப்படுத்துவது தொடர்பாக, இந்த கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டது.

இந்த கூட்டத்தில் பங்கேற்க, ஆந்திர துணை முதல்வரும், வனம் மற்றும் சுற்றுச்சூழல் துறை அமைச்சருமான பவன் கல்யாண் பெங்களூருக்கு வந்தார். விதான் சவுதாவில் நடந்த கூட்டத்தில் பங்கேற்றார்.

கூட்டத்தில் பங்கேற்பதற்கு முன், காவிரி இல்லத்துக்கு சென்ற பவன் கல்யாண், முதல்வர் சித்தராமையாவை சந்தித்தார். இருவரும் சிறிது நேரம் பேசிக் கொண்டிருந்தனர். அப்போது வீட்டு வசதித்துறை அமைச்சர் ஜமீர் அகமது கானும் உடன் இருந்தார்.

முதல்வரை சந்தித்த பின், வனத்துறை கூட்டத்தில் பங்கேற்க, விதான் சவுதாவுக்கு வந்தார். இங்கு பணியாற்றும் ஊழியர்கள், பவன் கல்யாணுடன் செல்பி எடுத்துக் கொள்ள போட்டி போட்டனர்.






      Dinamalar
      Follow us