வாலிபருக்கு கத்திக்குத்து நான்கு பேருக்கு போலீஸ் வலை
வாலிபருக்கு கத்திக்குத்து நான்கு பேருக்கு போலீஸ் வலை
ADDED : ஆக 07, 2024 10:16 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
துவாரகா: சிறு பிரச்னைக்காக 30 வயது மதிக்கத்தக்க வாலிபர் ஒருவர் கத்தியால் குத்தப்பட்டார்.
துவாரகாவின் பிந்தாபூர் பகுதியில் வசிப்பவர் சந்தீப், 30. இவர் நேற்று முன் தினம் இரவு தன் சகோதரருடன் சாலையில் நடந்து சென்று கொண்டிருந்தார்.
அப்போது எதிரே வந்த ஒரு கும்பல் மீது சந்தீப் மோதிவிட்டார். இதனால் இருதரப்பினரிடையே வாக்குவாதம் ஏற்பட்டது. ஆத்திரமடைந்த கும்பல், திடீரென சந்தீப்பை கத்தியால் தாக்கியது.
பொதுமக்கள் கூடியதால், அந்த கும்பல் அங்கிருந்து தப்பியது. இந்த சம்பவத்தை வீடியோ எடுத்த சிலர், அதை சமூக வலைதளங்களில் பதிவேற்றினர்.
அதன் அடிப்படையில் போலீசார் வழக்குப் பதிவு செய்து, அந்த கும்பலை வலைவீசித் தேடி வருகின்றனர்.
இடதுகாலில் கத்திக்குத்துக் காயமடைந்த சந்தீப், மருத்துவமனையில் சிகிச்சை பெற்றார்.