sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், நவம்பர் 04, 2025 ,ஐப்பசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

இந்தியா

/

மரத்தடியை தேடும் அரசியல் தலைவர்கள்

/

மரத்தடியை தேடும் அரசியல் தலைவர்கள்

மரத்தடியை தேடும் அரசியல் தலைவர்கள்

மரத்தடியை தேடும் அரசியல் தலைவர்கள்


ADDED : ஏப் 27, 2024 05:57 AM

Google News

ADDED : ஏப் 27, 2024 05:57 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

விஜயநகரா: வெயிலில் இருந்து தப்பிக்க, அரசியல் தலைவர்கள் மரங்களை தேடி ஓடுகின்றனர். மர நிழலில் பொதுக்கூட்டம் நடத்துகின்றனர்.

பல்லாரி லோக்சபா தொகுதிக்கு, மே 7ல் ஓட்டுப்பதிவு நடக்கிறது. காங்கிரஸ், பா.ஜ., - ம.ஜ.த., தலைவர்கள் அனல் பறக்க பிரசாரம் செய்கின்றனர். ஆனால் வெப்பத்தின் தாக்கம், அரசியல் தலைவர்களை சோர்வடைய செய்துள்ளது. அவர்களின் உற்சாகத்துக்கு முட்டுக்கட்டை போட்டுள்ளது.

தொகுதியில் பிரசாரத்துக்கு செல்லும்போது, மரங்களை தேடுகின்றனர். மரங்களின் நிழலில் பிரசார கூட்டங்கள் நடத்துகின்றனர். மரங்களின் அடியில் கூட்டம் நடத்தும்படி, உள்ளூர் தலைவர்களுக்கு உத்தரவிட்டுள்ளனர்.

கே.எம்.எப்., தலைவர் பீமா நாயக், நேற்று முன் தினம் விஜயநகரா, ஹகரிபொம்மனஹள்ளியின், ஹரேகொன்டனஹள்ளி, மாலவி, மசாரி நெல்குத்ரி, கோகலி தான்டா, பென்னகல்லு, வரலஹள்ளி, வட்டம்மனஹள்ளி, வல்லபாபுரா உட்பட பல்வேறு கிராமங்களில், காங்கிரஸ் வேட்பாளர் துக்காராமுக்கு ஆதரவாக, பிரசார கூட்டம் நடந்தது. இந்த கூட்டங்களும் கூட, மரங்களின் அடியில்தான் நடந்தன.

விஜயநகரா மட்டுமின்றி, பெரும்பாலான வடமாவட்டங்களில் இதே சூழ்நிலை நிலவுகிறது.






      Dinamalar
      Follow us