sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

இந்தியா

/

அரசியல் உள்நோக்கம் கொண்டவர் சபாநாயகர் மீது எம்.எல்.சி., ரவி பாய்ச்சல்

/

அரசியல் உள்நோக்கம் கொண்டவர் சபாநாயகர் மீது எம்.எல்.சி., ரவி பாய்ச்சல்

அரசியல் உள்நோக்கம் கொண்டவர் சபாநாயகர் மீது எம்.எல்.சி., ரவி பாய்ச்சல்

அரசியல் உள்நோக்கம் கொண்டவர் சபாநாயகர் மீது எம்.எல்.சி., ரவி பாய்ச்சல்


ADDED : ஜூன் 16, 2024 10:58 PM

Google News

ADDED : ஜூன் 16, 2024 10:58 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மங்களூரு: ''அரசியல் உள்நோக்கம் கொண்டவர்,'' என்று, சட்டசபை சபாநாயகர் காதரை, பா.,ஜ., -- எம்.எல்.சி., ரவி விமர்சித்துள்ளார்.

பிரதமர் நரேந்திர மோடி மூன்றாவது முறையாக பதவியேற்றதை, மங்களூரு போலார் பகுதியில் பா.ஜ., தொண்டர்கள் கொண்டாடினர். அப்போது கூட்டத்திற்குள் புகுந்த மர்ம நபர்கள், நான்கு பேரை கத்தியால் குத்தி விட்டு தப்பினர்.

தேசிய ஜனநாயக கூட்டணி மீண்டும் ஆட்சிக்கு வந்ததை பொறுத்துக் கொள்ள முடியாமல், ஒரு மதத்தினர் இந்த சம்பவத்தில் ஈடுபட்டதாக, பா.ஜ., தலைவர்கள் குற்றம் சாட்டி வருகின்றனர்.

இந்த குற்றச்சாட்டை, சட்டசபை சபாநாயகர் காதர் மறுத்தார். யாரோ வெளி ஆட்கள் செய்த தவறுக்காக, போலார் பகுதி மக்களை விமர்சிப்பது சரியல்ல என்று கூறினார்.

இந்நிலையில் கத்திக்குத்தில் காயம் அடைந்தவர்களை, பா.,ஜ., -- எம்.எல்.சி., ரவி நேற்று சந்தித்து ஆறுதல் கூறினார்.

பின் அவர் அளித்த பேட்டி:

மாநில காங்கிரஸ் அரசு, மதவெறியர்களுக்கு ஆதரவாக செயல்படுகிறது. இதனால் மாநிலத்தில் கத்திக்குத்து சம்பவங்கள் சர்வ சாதாரணமாக நடக்கிறது. போலார் பிரச்சனையை வைத்து, சமூக நல்லிணக்கத்தை சீர்குலைக்க முயற்சி நடப்பதாக, சபாநாயகர் காதர் கூறியுள்ளார்.

அவர் அரசியல் உள்நோக்கம் கொண்டவர். அவர் சரியாக இருந்திருந்தால், மங்களூரில் குக்கர் குண்டுவெடிப்பு நடந்திருக்காது.

போலார் வழக்கில் முக்கிய குற்றவாளிகளை விரைவில் கைது செய்ய வேண்டும். குற்றவாளிகளை பாதுகாக்க முயற்சி நடக்கிறது. அரசின் பாரபட்சமான நடவடிக்கைக்கு எதிர்ப்பாக, சட்டசபை, மேலவையில் குரல் எழுப்புவோம். இந்த அரசு, நிறைய பாவங்கள் செய்கிறது. இந்த நிலை நீடித்தால் ஆட்சியில் இருப்பது கஷ்டம்.

இவ்வாறு அவர் கூறினார்.






      Dinamalar
      Follow us