sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, டிசம்பர் 20, 2025 ,மார்கழி 5, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

இந்தியா

/

மெட்ரோ சேவை நீட்டிக்க திட்ட அறிக்கை தயாரிப்பு

/

மெட்ரோ சேவை நீட்டிக்க திட்ட அறிக்கை தயாரிப்பு

மெட்ரோ சேவை நீட்டிக்க திட்ட அறிக்கை தயாரிப்பு

மெட்ரோ சேவை நீட்டிக்க திட்ட அறிக்கை தயாரிப்பு


ADDED : ஜூலை 23, 2024 10:43 PM

Google News

ADDED : ஜூலை 23, 2024 10:43 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பெங்களூரு : மெட்ரோ ரயில் சேவையை மூன்று வழித்தடங்களில் நீட்டிப்பது குறித்து, ஹைதராபாத் நிறுவனம் திட்ட அறிக்கை தயாரிக்க உள்ளது.

பெங்களூரில் போக்குவரத்து நெரிசலை குறைக்கும் வகையில், ஒயிட்பீல்டு - செல்லகட்டா-; நாகசந்திரா- - சில்க் இன்ஸ்டிடியூட் ஆகிய வழித்தடங்களில் மெட்ரோ ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன. ஆர்.வி., ரோடு -- பொம்மசந்திரா இடையில் மெட்ரோ பாதை அமைக்கப்பட்டுள்ளது. டிசம்பர் மாதம் முதல் ரயில்கள் இயக்கப்படும் வாய்ப்புள்ளது.

இந்த மூன்று வழித்தடங்களிலும், மெட்ரோ ரயில் சேவையை நீட்டிக்க, மெட்ரோ ரயில் நிர்வாகம் முடிவு செய்துள்ளது.

அதாவது செல்லகட்டா வரை இயக்கப்படும் ரயில், 15 கி.மீ., துாரத்தில் உள்ள பிடதி வரையிலும்; சில்க் இன்ஸ்டிடியூட் வரை இயக்கப்படும் ரயில், -24 கி.மீ., துாரத்தில் உள்ள ஹரோஹள்ளி வரையிலும்; பொம்மசந்திரா- வரை இயக்கப்பட உள்ள ரயில், 11 கி.மீ., துாரத்தில் உள்ள அத்திபள்ளி வரையிலும் நீட்டிக்கப்படும் வாய்ப்பு உள்ளது.

இதற்கான திட்ட அறிக்கை தயாரிக்க, சமீபத்தில் பெங்களூரில் மெட்ரோ ரயில் நிர்வாகம் டெண்டருக்கு அழைப்பு விடுத்திருந்தது. இதில் ஹைதராபாத்தைச் சேர்ந்த நிறுவனம் 2 கோடி ரூபாய்க்கு 'டெண்டர்' எடுத்துள்ளது.






      Dinamalar
      Follow us