sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

இந்தியா

/

23 ஐம்பொன் சிலைகள் திருட்டு புதுச்சேரி நரிக்குறவர்கள் கைது

/

23 ஐம்பொன் சிலைகள் திருட்டு புதுச்சேரி நரிக்குறவர்கள் கைது

23 ஐம்பொன் சிலைகள் திருட்டு புதுச்சேரி நரிக்குறவர்கள் கைது

23 ஐம்பொன் சிலைகள் திருட்டு புதுச்சேரி நரிக்குறவர்கள் கைது


ADDED : ஜூலை 09, 2024 08:26 PM

Google News

ADDED : ஜூலை 09, 2024 08:26 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

புதுச்சேரி:புதுச்சேரி, லாஸ்பேட்டை கிருஷ்ணா நகர், 17வது குறுக்கு தெருவை சேர்ந்தவர் சிவசங்கரன், 69; வீட்டின் ஒரு பகுதியில் பட்டறை அமைத்து, ஐம்பொன் சுவாமி சிலை செய்து விற்பனை செய்கிறார். கடந்த 2ம் தேதி பிரான்ஸ் நாட்டில் உள்ள கோவிலில் பிரதிஷ்டை செய்ய தயார் செய்து வைத்திருந்த 50 கிலோ எடை அம்மன் சிலை, 8 கிலோ எடை பித்தளை சிலை மாயமானது.

லாஸ்பேட்டை போலீசார் விசாரணை நடத்தினர். அதில், சிவசங்கரன் வீட்டில் செய்து வைத்திருந்த ஏராளமான சிலைகளில் மேலும், 21 சிலைகள் திருடு போனது தெரிய வந்தது. அப்பகுதி கண்காணிப்பு கேமரா பதிவுகளை ஆய்வு செய்ததில், லாஸ்பேட்டை நரிக்குறவர் காலனியை சேர்ந்த அலெக்ஸ், 21, சிவசங்கரன் வீட்டின் அருகே அடிக்கடி வந்து சென்றது தெரிய வந்தது.

அலெக்ஸை பிடித்து விசாரித்தபோது, தன் நண்பர்களான நரிக்குறவர் காலனி முத்துப்பாண்டி, 24, மருதுபாண்டி, 25, ராகவா, 23, ஆகியோருடன் சேர்ந்து சிலைகளை திருடியதும், சிலைகளை வாங்க யாரும் முன் வராததால், அவற்றை உருக்கி விற்பனை செய்ய திட்டமிட்டிருந்தது தெரிய வந்தது.

நரிக்குறவர் காலனியில் புதரில் பதுக்கி வைத்திருந்த 23 சிலைகளை போலீசார் பறிமுதல் செய்தனர். தொடர்ந்து போலீசார் வழக்கு பதிந்து, அலெக்ஸ், முத்துப்பாண்டி, ராகவா ஆகியோரை கைது செய்து கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

தலைமறைவாக உள்ள மருதுபாண்டியை தேடி வருகின்றனர்.






      Dinamalar
      Follow us