sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், நவம்பர் 06, 2025 ,ஐப்பசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

இந்தியா

/

வெங்கட ரமண சுவாமி கோவிலில்  இன்று புஷ்ப பல்லக்கு

/

வெங்கட ரமண சுவாமி கோவிலில்  இன்று புஷ்ப பல்லக்கு

வெங்கட ரமண சுவாமி கோவிலில்  இன்று புஷ்ப பல்லக்கு

வெங்கட ரமண சுவாமி கோவிலில்  இன்று புஷ்ப பல்லக்கு


ADDED : மார் 28, 2024 10:36 PM

Google News

ADDED : மார் 28, 2024 10:36 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

தங்கவயல் : பிரசன்ன லட்சுமி வெங்கட ரமண சுவாமி கோவிலின் பிரம்மோற்சவத்தின் முத்தாய்ப்பாக இன்று இரவு புஷ்ப பல்லக்கு பவனி நடக்கிறது.

ராபர்ட்சன் பேட்டை கீதா சாலையில் நூற்றாண்டு பழமைவாய்ந்த ஸ்ரீ பிரசன்ன லட்சுமி வெங்கட ரமண சுவாமி கோவிலில் 89ம் ஆண்டு பிரம்மோற்சவம் இம்மாதம் 19ம் தேதி முதல் நடந்து வருகிறது.

இன்று இரவு நடக்கும் புஷ்ப பல்லக்கு பிரசித்தி பெற்ற திருவிழா. பல வகையான 2 டன் பூக்களாலும் மின்னொளி அலங்காரத்துடனும் புஷ்ப பல்லக்கு உருவாக்கப்படுகிறது.

இரவு 11:00 மணிக்கு கோவிலில் இருந்து புஷ்ப பல்லக்கு புறப்பட்டு நகர் வலம் வரும். அடுத்த நாள் காலை 7:30 மணிக்கு கோவிலை வந்தடைகிறது.

புஷ்ப பல்லக்கு திருவிழாவை காண கர்நாடகம், ஆந்திரா, தமிழகம் ஆகிய மாநிலங்களின் பல்வேறு நகரங்களில் இருந்து ஏராளமான பக்தர்கள் வந்து, சுவாமியை தரிசிக்கின்றனர்.

புஷ்ப பல்லக்கு திருவிழாவை முன்னிட்டு பக்திசை கச்சேரி, பஜனைகள் உட்பட பல்வேறு கலை நிகழ்ச்சிகளும் நடத்தப்படுகின்றன. இதனால் தங்கவயலில் இரவில் ஒரு பகலை காணலாம்.

பிரசன்ன லட்சுமி வெங்கட ரமண சுவாமி கோவிலில் புஷ்ப பல்லக்கு திருவிழாவையொட்டி கோவிலில் காலை முதலே சுவாமிக்கு அபிஷேகம் அலங்காரம் அர்ச்சனைகள், மகா மங்களாரத்தி, பிரசாத வினியோகம், அன்ன தானம் வழங்கப்படுகிறது. தொடர்ந்து விசேஷ பூஜைகளும் நடக்கின்றன.






      Dinamalar
      Follow us