ADDED : ஜூன் 26, 2024 01:26 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
புதுடில்லி, காங்., லோக்சபா எம்.பி.,க்களின் கூட்டம் டில்லியில் நேற்றிரவு நடந்தது. இதில், லோக்சபா எதிர்க்கட்சி தலைவராக, காங்கிரஸ் எம்.பி., ராகுலை அக்கட்சியினர் ஒருமனதாக தேர்வு செய்து அறிவித்தனர்.
இதற்கான கடிதத்தை இடைக்கால சபாநாயகரிடம் கட்சித் தலைமை நேற்றிரவு அளித்தது. இந்த தகவலை காங்., பொதுச்செயலர் வேணுகோபால் தெரிவித்தார்.
கடந்த, 2014 மற்றும் 2019 லோக்சபா தேர்தல்களில் குறைந்த தொகுதி களில் மட்டுமே காங்கிரஸ் வெற்றி பெற்றது. இதனால் எதிர்க்கட்சி தலைவர் பதவி, காங்கிரசுக்கு கிடைக்கவில்லை.
சமீபத்தில் நடந்து முடிந்த தேர்தலில், 99 தொகுதிகளில் காங்., வெற்றி பெற்றதை அடுத்து, லோக்சபா எதிர்க்கட்சி தலைவராக ராகுல் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.