sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 06, 2025 ,புரட்டாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

இந்தியா

/

சசி தரூர் செயல்பாடுகள்: ராகுல் கடும் எச்சரிக்கை

/

சசி தரூர் செயல்பாடுகள்: ராகுல் கடும் எச்சரிக்கை

சசி தரூர் செயல்பாடுகள்: ராகுல் கடும் எச்சரிக்கை

சசி தரூர் செயல்பாடுகள்: ராகுல் கடும் எச்சரிக்கை

2


UPDATED : மார் 03, 2025 02:40 AM

ADDED : மார் 03, 2025 02:12 AM

Google News

UPDATED : மார் 03, 2025 02:40 AM ADDED : மார் 03, 2025 02:12 AM

2


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

புதுடில்லி: கேரளாவில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்த முதல்வர் பினராயி விஜயன் தலைமையிலான இடது ஜனநாயக முன்னணி கூட்டணி ஆட்சி அமைந்து உள்ளது.

இங்கு, சட்டசபைக்கு அடுத்த ஆண்டு தேர்தல் நடக்கவுள்ளது. கடந்த இரண்டு தேர்தல்களிலும் வெற்றி பெற முடியாத காங்கிரஸ், இந்த தேர்தலில் வெற்றி பெற்று ஆட்சியைப் பிடிக்க வேண்டும் என்பதில் தீவிரமாக உள்ளது.

இந்நிலையில் கேரளாவின் ஆளுங்கட்சியை பாராட்டி பேசிய காங்., - எம்.பி., சசி தரூர், அமெரிக்க அதிபர் டிரம்பை, பிரதமர் மோடி சந்தித்ததையும் பாராட்டினார். இதனால், கேரள காங்கிரஸ் நிர்வாகிகள் சசி தரூரை கடுமையாக விமர்சித்தனர்.

சசி தரூருக்கு ஆதரவாகவும் சிலர் வரிந்து கட்டினர். கட்சி நிர்வாகிகளிடையே ஏற்பட்டுள்ள இந்த மோதல், கட்சி மேலிடத்துக்கு தலைவலியை ஏற்படுத்தியது. இந்நிலையில், கேரள மாநில காங்கிரஸ் தலைவர்களுடன், அக்கட்சி எம்.பி., ராகுல் டில்லியில் ஆலோசனை நடத்தினார்.

அப்போது, 'தலைவர்கள் அனைவரும் கவனமுடன் இருக்க வேண்டும்; கட்சிக்கு அவப்பெயர் ஏற்படுத்தும் வகையில் செயல்படக்கூடாது. கட்சி விதிகளை மீறுபவர்கள் மீது, கடும் நடவடிக்கை எடுக்கப்படும்' என, ராகுல் எச்சரித்ததாக கூறப்படுகிறது.






      Dinamalar
      Follow us