sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

இந்தியா

/

பா.ஜ., தொடர்ந்த மானநஷ்ட வழக்கில் ஜூன் 7ல் ஆஜராக ராகுலுக்கு உத்தரவு

/

பா.ஜ., தொடர்ந்த மானநஷ்ட வழக்கில் ஜூன் 7ல் ஆஜராக ராகுலுக்கு உத்தரவு

பா.ஜ., தொடர்ந்த மானநஷ்ட வழக்கில் ஜூன் 7ல் ஆஜராக ராகுலுக்கு உத்தரவு

பா.ஜ., தொடர்ந்த மானநஷ்ட வழக்கில் ஜூன் 7ல் ஆஜராக ராகுலுக்கு உத்தரவு

1


ADDED : ஜூன் 02, 2024 06:12 AM

Google News

ADDED : ஜூன் 02, 2024 06:12 AM

1


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பெங்களூரு: கடந்தாண்டு சட்டசபை தேர்தலின்போது, பா.ஜ., அரசுக்கு எதிராக விளம்பரம் செய்து அவதுாறு பரப்பியதாக தொடரப்பட்ட மானநஷ்ட வழக்கில் முதல்வர் சித்தராமையா, துணை முதல்வர் சிவகுமாருக்கு, சிட்டி சிவில் நீதிமன்றம் நிபந்தனை ஜாமின் வழங்கியது. அதே வேளையில், காங்., - எம்.பி., ராகுல், ஜூன் 7ம் தேதி நேரில் ஆஜராக வேண்டும் என்று உத்தரவிட்டது.

கடந்தாண்டு சட்டசபை தேர்தலின்போது, மே 5ல், அனைத்து முன்னணி நாளிதழ்களிலும் முதல் பக்கத்தில் 'ஊழல் விகிதம் பட்டியல்' என்ற பெயரில் காங்கிரஸ் விளம்பரம் கொடுத்திருந்தது.

அதில், 'பா.ஜ., தலைமையிலான மாநில அரசு, பல்வேறு அரசு பதவிகளுக்கு கட்டணம் நிர்ணயம் செய்வதாகவும், கொரோனா பொருட்கள் வழங்கல், பொது பயன்பாட்டு ஒப்பந்தம், மடங்களுக்கு மானியம், பள்ளிகளுக்கு முட்டை வழங்கல், சாலை பணிகளில் கமிஷன் எடுக்கப்பட்டதாகவும் 40 சதவீதம் கமிஷன் அரசு' எனவும் குறிப்பிட்டிருந்தது.

இதை காங்கிரஸ் எம்.பி., ராகுல், தனது 'எக்ஸ்' சமூக வலைதளத்தில் பதிவிட்டிருந்தார்.

இதை கண்டித்து பா.ஜ., மாநில பொது செயலர் கேசவ் பிரசாத், வழக்கறிஞர் வினோத் குமார் ஆகியோர் ராகுல், சித்தராமையா, சிவகுமார் மீது, பெங்களூரு சிட்டி சிவில் நீதிமன்றத்தில் மானநஷ்ட வழக்கு தொடர்ந்திருந்தனர்.

இவ்வழக்கில் தங்களுக்கு ஜாமின் வழங்க கோரி, முதல்வர் சித்தராமையா, துணை முதல்வர் சிவகுமார் மனு தாக்கல் செய்திருந்தனர். அதேவேளையில், நேரில் ஆஜராக விலக்கு அளிக்கும்படி, ராகுல் தரப்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது. சித்தராமையா, சிவகுமார், ராகுல் நேரில் ஆஜராகுமாறு நோட்டீஸ் அனுப்பப்பட்டது.

இதையடுத்து, சித்தராமையா, சிவகுமார் ஆகியோர் நேற்று விசாரணைக்கு நீதிமன்றத்துக்கு வந்தனர்.

இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிமன்றம், இருவருக்கும் தலா 50,000 ரூபாய் உத்தரவாதத்துடன், ஜாமின் வழங்கப்படுவதாக' அறிவித்து, விசாரணையை மதியம் ஒத்திவைத்தது.

மதியம் நடந்த விசாரணையில், பா.ஜ., தரப்பில் வாதிட்ட வழக்கறிஞர், 'ராகுலுக்கு நேரில் ஆஜராக விலக்கு அளிக்க கூடாது' என்றார்.

ராகுல் தரப்பு வழக்கறிஞர் வாதிடுகையில், ''விளம்பரத்தில் அவரது படம் இருந்ததால், அவருக்கு எதிராக வழக்கு தொடரப்பட்டு உள்ளது,'' என்றார்.

இதையடுத்து, நேற்று ஒரு நாள் விலக்கு அளித்த நீதிமன்றம், 'ஜூன் 7ம் தேதி விசாரணைக்கு நேரில் ஆஜராக வேண்டும்' என உத்தரவிட்டது.

சிட்டி சிவில் நீதிமன்றத்தில் இருந்து ஒன்றாக வெளியே வந்த முதல்வர் சித்தராமையா, துணை முதல்வர் சிவகுமார். இடம்: பெங்களூரு.






      Dinamalar
      Follow us