ADDED : மார் 29, 2024 09:50 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஷாஜஹான்பூர்:உத்தர பிரதேசத்தில், 16 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த வாலிபரை போலீசார் தேடுகின்றனர்.
உ.பி., மாநிலம் ஷாஜஹான்பூர் மாவட்டம் மீரான்பூர் கத்ரா கிராமத்தில் வசித்த 16 வயது சிறுமியை, அதே கிராமத்தைச் சேர்ந்த வாலிபர் பண்ணைக்கு இழுத்துச் சென்றார்.
அங்கு அந்தச் சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். சிறுமி எதிர்ப்பு தெரிவித்த போது கண்மூடித்தனமாக அடித்துள்ளார்.
சிறுமியின் பெற்றோர் கொடுத்த புகார்படி வழக்குப் பதிவு செய்த போலீசார், சிறுமியை மருத்துவ பரிசோதனைக்கு அனுப்பினர. வாலிபரை தேடி வருகின்றனர்.

