ம.பி.யில் ஆள்துளை கிணற்றில் மீட்கப்பட்ட குழந்தை கவலைக்கிடம்
ம.பி.யில் ஆள்துளை கிணற்றில் மீட்கப்பட்ட குழந்தை கவலைக்கிடம்
ADDED : ஜூலை 30, 2024 02:31 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
போபால்: மத்திய பிரதேசத்தில் ஆழ்துளை கிணற்றில் விழுந்த 3 வயது குழந்தை 5 மணி நேர போராட்டத்திற்கு பின் மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டது.
மத்திய பிரதேச மாநிலம் சிங்கரவுலி மாவட்டத்தில் காஸார் என்ற கிராமத்தில் விவசாய நிலப்பகுதியில் விளையாடிக் கொண்டிருந்த சவுமியா என்ற 3 வயது குழந்தை அங்கு திறந்து கிடந்த 250 அடி ஆழ ஆள்துளை கிணற்றில் தவறி விழுந்தது.
தகவல் அறிந்த தீயணைப்பு படையினர் மற்றும் மீட்பு படையினர் 70 அடி ஆழத்தில் சிக்கியிருந்த குழந்தையை 5 மணி நேரம் போராடி மீட்டனர்.
உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு குழந்தை மிகவும் கவலைக்கிடமாக உயிருக்கு ஆபத்தான நிலையில் உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.