ADDED : மார் 28, 2024 10:42 PM
பெங்களூரு : லோக்சபா தேர்தலில், கர்நாடகாவின் 10 தொகுதிகளில் தேசிய மராத்திய கட்சி போட்டியிடுகிறது. வேட்பாளர்கள் பெயரை நேற்று அறிவித்தது.
இதுதொடர்பாக, ஆர்.எம்.பி., தலைவர் ஷியாம் சுந்தர் காயக்வாட் நேற்று கூறியதாவது:
இம்முறை லோக்சபா தேர்தலில், கர்நாடகாவின் 10 தொகுதிகளில் ஆர்.எம்.பி., வேட்பாளர்கள் களமிறங்குவர். பெலகாவி தொகுதியில், வக்கீல் ஈஸ்வர் ருத்மர்ரா காடிக்கு சீட் வழங்கப்பட்டுள்ளது.
உத்தர கன்னடாவில் காயக்வாட்; தார்வாடில் கோர்கடே; ஹாவேரியில் நாராயண ராவ் காயக்வாட்; சிக்கோடியில் வினோத் சாளுன்டே; பீதரில் விஜயகுமார் படேல்; பாகல்கோட்டுக்கு ஸ்ரீகாந்த்; ஷிவமொகாவில் தேவராஜ் ஷிந்தே ஆகியோர் வேட்பாளராக போட்டியிடுகின்றனர்.
விஜயபுரா மற்றும் கலபுரகி லோக்சபா தொகுதிகளில், எஸ்.சி., பிரிவு வேட்பாளர்கள் களமிறக்கப்படுவர்.
இவ்வாறு அவர் கூறினார்.

