sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, டிசம்பர் 13, 2025 ,கார்த்திகை 27, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

இந்தியா

/

ஆர்.டி.ஓ., அதிகாரி வீட்டில் ரூ.3 லட்சம், நகை பறிமுதல்

/

ஆர்.டி.ஓ., அதிகாரி வீட்டில் ரூ.3 லட்சம், நகை பறிமுதல்

ஆர்.டி.ஓ., அதிகாரி வீட்டில் ரூ.3 லட்சம், நகை பறிமுதல்

ஆர்.டி.ஓ., அதிகாரி வீட்டில் ரூ.3 லட்சம், நகை பறிமுதல்


ADDED : ஆக 16, 2024 06:53 AM

Google News

ADDED : ஆக 16, 2024 06:53 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பல்லாரி: வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்த புகாரில், பல்லாரி ஆர்.டி.ஓ., அதிகாரி வீட்டில், லோக் ஆயுக்தா போலீசார் நேற்று சோதனை நடத்தினர்.

விஜயநகரா மாவட்டம், ஹொஸ்பேட் டவுன் விவேகானந்தா நகரை சேர்ந்தவர் நாகேஷ். பல்லாரி ஆர்.டி.ஓ., அலுவலகத்தில் ஆவணங்கள் சேகரிப்பு பிரிவில் அதிகாரியாக வேலை செய்கிறார். இவர், வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்து இருப்பதாக, பல்லாரி லோக் ஆயுக்தா இன்ஸ்பெக்டர் முகமது ரபீக்கிற்கு, அடிக்கடி புகார் சென்றது.

இதையடுத்து, நாகேஷின் வீட்டிற்கு முகமது ரபீக் தலைமையில் லோக் ஆயுக்தா போலீசார் நேற்று காலை 8:00 மணிக்கு சென்றனர். நாகேஷ், அவரது குடும்பத்தினரின் மொபைல் போன்களை வாங்கி, 'சுவிட்ச் ஆப்' செய்தனர். பின், சோதனையை துவக்கினர்.

வீட்டில் உள்ள அனைத்து அறைகளிலும், அங்குலம், அங்குலமாக சோதனை நடத்தப்பட்டது. மதியம் 2:00 மணி வரை நடந்த சோதனையில், கணக்கில் வராத 3 லட்சம் ரூபாய் ரொக்கம்; தங்கம், வெள்ளி நகைகள் பறிமுதல் செய்யப்பட்டன.






      Dinamalar
      Follow us