sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

இந்தியா

/

வேலை வாங்கி தருவதாக ரூ.70 லட்சம் மோசடி 

/

வேலை வாங்கி தருவதாக ரூ.70 லட்சம் மோசடி 

வேலை வாங்கி தருவதாக ரூ.70 லட்சம் மோசடி 

வேலை வாங்கி தருவதாக ரூ.70 லட்சம் மோசடி 


ADDED : ஆக 24, 2024 01:48 AM

Google News

ADDED : ஆக 24, 2024 01:48 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கலபுரகி, : கலபுரகி ஜெயதேவா அரசு மருத்துவமனையில் வேலை வாங்கி தருவதாக, 110 பேரிடம் 70 லட்சம் ரூபாய் மோசடி செய்த, மளிகை கடைக்காரர் உட்பட இரண்டு பேர் கைது செய்யப்பட்டனர்.

கலபுரகி டவுனில் ஜெயதேவா இதய மருத்துவமனை கட்டப்பட்டு வருகிறது.

கட்டுமான பணிகள் முடியும் தருவாயில் உள்ளன. இன்னும் இரண்டு மாதங்களில் மருத்துவமனை திறக்கப்படலாம் என்று தெரிகிறது.

இந்த மருத்துவமனையில், 'டி' குரூப் ஊழியர் வேலை வாங்கித் தருவதாக கூறி, சிலர் பணம் வசூலித்து மோசடியில் ஈடுபடுவதாக, கலபுரகி டவுன் போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

தகவலின்படி மளிகை கடை நடத்தும் சந்தோஷ், அவரது உறவினர் ராஜசேகர் ஆகிய இருவர் கைது செய்யப்பட்டனர். இவர்கள் இருவரும் வேலை வாங்கித் தருவதாக 110 பேரிடம் இருந்து 70 லட்சம் ரூபாய் மோசடி செய்தது தெரிய வந்தது.

இந்த வழக்கில் மேலும் சிலருக்கு தொடர்பு இருப்பதும் தெரிய வந்துள்ளதால், அவர்களை போலீஸ் தேடி வருகின்றனர்.






      Dinamalar
      Follow us