sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், நவம்பர் 05, 2025 ,ஐப்பசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

இந்தியா

/

முப்படையினர் கிளப்பில் ரூ.77.50 கோடி ஊழல்

/

முப்படையினர் கிளப்பில் ரூ.77.50 கோடி ஊழல்

முப்படையினர் கிளப்பில் ரூ.77.50 கோடி ஊழல்

முப்படையினர் கிளப்பில் ரூ.77.50 கோடி ஊழல்


ADDED : பிப் 28, 2025 12:38 AM

Google News

ADDED : பிப் 28, 2025 12:38 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மும்பை,மும்பையில் முப்படையினருக்காக நடத்தப்படும் கிளப்பில், 77.50 கோடி ரூபாய் முறைகேடு நடந்தது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.

மஹாராஷ்டிராவின் மும்பை, கொலாபா பகுதியில் உள்ள கடற்படை நகரில், முப்படையினருக்கான பிரமாண்ட பொழுதுபோக்கு கிளப் உள்ளது. 97 ஆண்டுகளுக்கு முன் துவங்கப்பட்ட இந்த கிளப்பில், உணவு விடுதி, விளையாட்டு மற்றும் பொழுதுபோக்கு அம்சங்கள் உண்டு. ராணுவம், கடற்படை, விமானப்படை ஆகியவற்றில் பணியாற்றுவோருக்கான இந்த கிளப்பில், 77.50 கோடி ரூபாய் அளவுக்கு முறைகேடு நடந்துள்ளது தெரியவந்துள்ளது.

இதையடுத்து, மேற்கு மண்டல கடற்படை தலைமையகம் சார்பாக, கடற்படை கேப்டன் அளித்த புகாரின் அடிப்படையில், மும்பை பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் விசாரித்து வருகின்றனர். முறைகேடு தொடர்பாக முதல் தகவல் அறிக்கை தாக்கல் செய்யப்பட்ட நிலையில், ஆடிட்டரை வைத்து, கணக்குகளை தணிக்கை செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது.

இது தொடர்பாக ராணுவத் துறை செய்தித் தொடர்பு அதிகாரி கூறுகையில், 'சில மாதங்களுக்கு முன் வழக்கமான தணிக்கையின்போது, கணக்கில் முரண்பாடு இருப்பதை கிளப்பின் செயலர் கண்டறிந்தார்.

'இதையடுத்து, தனியாக ஆடிட்டரை நியமித்து தணிக்கை செய்யப்பட்டது. நிதி கணக்குகளையும் கிளப் நிர்வாகம் ஆய்வு செய்தது. அப்போது இந்த முறைகேடு நடந்தது தெரியவந்தது' என்றார்.






      Dinamalar
      Follow us