ADDED : செப் 12, 2024 12:51 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சபரிமலை:திருவோணம் பண்டிகையும், புரட்டாசி மாத பூஜையும் சேர்ந்து வருவதால், சபரிமலை நடை இந்த மாதம் எட்டு நாட்கள் தொடர்ச்சியாக திறந்திருக்கும்.
நாளை மாலை 5:00 மணிக்கு மேல் சாந்தி மகேஷ் நம்பூதிரி நடை திறந்து தீபம் ஏற்றுவார். தொடர்ந்து வேறு விசேஷ பூஜைகள் நடைபெறாது. இரவு 10:00 மணிக்கு நடை அடைக்கப்படும்.
செப்., 14 அதிகாலை 5:00-க்கு நடை திறந்ததும் தந்திரி பிரம்மதத்தன், அய்யப்பனுக்கு அபிஷேகம் செய்து நெய்யபிஷேகத்தை துவக்கி வைப்பார். தொடர்ந்து வழக்கமான பூஜைகளுடன் திருவோண சிறப்பு பூஜைகளும் துவங்கும்.
இரவு 7:00 மணிக்கு பிரசித்தி பெற்ற படி பூஜை நடைபெறும். செப்., 22 இரவு 10:00 மணிக்கு நடை அடைக்கப்படும்.

