ADDED : ஆக 15, 2024 04:07 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பெங்களூரு : கர்நாடகா உணவுத்துறை அதிகாரிகள் கூறியதாவது:
கர்நாடகாவில் சட்ட சபை தேர்தல் நடந்த போது, ஒவ்வொரு பயனாளிகளுக்கும், தலா 10 கிலோ இலவச அரிசி வழங்குவதாக, காங்கிரஸ் அறிவித்திருந்தது. அரிசி பற்றாக்குறையால் 5 கிலோ அரிசியும், 5 கிலோ அரிசிக்கான பணமும் வழங்கப்பட்டது.
தற்போது பணத்துக்கு பதிலாக அரிசி வினியோகிக்க, அரசு ஆலோசிக்கிறது. இது குறித்து ஆய்வு செய்த போது, 98 சதவீத பயனாளிகள், 5 கிலோ அரிசிக்கு பதிலாக, சமையல் எண்ணெய், சர்க்கரை வழங்கும்படி கோரிக்கை விடுத்தனர். இது குறித்து விரைவில் முடிவு செய்வோம்.
உணவு துறை அமைச்சர் முனியப்பா, டில்லியில் மத்திய உணவுத்துறை அமைச்சர் பிரஹலாத் ஜோஷியை சந்தித்து, அன்னபாக்யாவுக்கு அரிசி வழங்கும்படி வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.