பயங்கரவாதத்தை ஒழிக்க பாதுகாப்பு படை வீரர்கள் உறுதி: ராஜ்நாத் சிங்
பயங்கரவாதத்தை ஒழிக்க பாதுகாப்பு படை வீரர்கள் உறுதி: ராஜ்நாத் சிங்
ADDED : ஜூலை 16, 2024 12:37 PM

புதுடில்லி: 'நமது வீரர்கள் பயங்கரவாதத்தை ஒழிக்கவும், பிராந்தியத்தில் அமைதியை மீட்டெடுக்கவும் உறுதியுடன் உள்ளனர்' என மத்திய பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளார்.
காஷ்மீரில் பயங்கரவாதிகள் தாக்குதல் அதிகரித்து விட்டது. தோடா மாவட்டத்தில், இன்று(ஜூலை 16) பயங்கரவாதிகள் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 4 பாதுகாப்பு படை வீரர்கள் வீரமரணம் அடைந்தனர். இது குறித்து எக்ஸ் சமூக வலைதளத்தில், மத்திய பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
பயங்கரவாத எதிர்ப்பு நடவடிக்கையில் நமது துணிச்சலான மற்றும் தைரியமான 5 பாதுகாப்பு படை வீரர்களை இழந்தது வருத்தம் அளிக்கிறது. பயங்கரவாதத்திற்கு எதிரான நடவடிக்கைகள் நடைபெற்று வருகின்றன. நமது வீரர்கள் பயங்கரவாதத்தை ஒழிக்கவும், பிராந்தியத்தில் அமைதியை மீட்டெடுக்கவும் உறுதியுடன் உள்ளனர். இவ்வாறு ராஜ்நாத் சிங் கூறியுள்ளார்.
பாகிஸ்தானுக்கு பதிலடி
