sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், டிசம்பர் 22, 2025 ,மார்கழி 7, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

இந்தியா

/

கள்ளில் கலப்படம் செய்ய பதுக்கிய 4,950 லிட்டர் எரிசாராயம் பறிமுதல்

/

கள்ளில் கலப்படம் செய்ய பதுக்கிய 4,950 லிட்டர் எரிசாராயம் பறிமுதல்

கள்ளில் கலப்படம் செய்ய பதுக்கிய 4,950 லிட்டர் எரிசாராயம் பறிமுதல்

கள்ளில் கலப்படம் செய்ய பதுக்கிய 4,950 லிட்டர் எரிசாராயம் பறிமுதல்


ADDED : செப் 13, 2024 02:00 AM

Google News

ADDED : செப் 13, 2024 02:00 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கேரள மாநிலத்தில், ஓணம் பண்டிகையை முன்னிட்டு, கலால் துறையினர் சிறப்பு சோதனை நடத்தி வருகின்றனர். கடந்த வாரம், பாலக்காடு மாவட்டம் கொல்லங்கோடு சிக்கணாம்பாறை பகுதியில், தமிழகத்தில் இருந்து கேரளாவுக்கு கடத்தி வந்த, 1,650 லிட்டர் எரிசாராயம் பறிமுதல் செய்யப்பட்டது.

இது தொடர்பாக, கைது செய்த மூவரிடம் நடத்திய விசாரணையில், தமிழகம் -- கேரளா எல்லையில், எரிசாராயம் பதுக்கி வைத்திருப்பது தெரிந்தது.

நேற்று முன்தினம் இரவு, தமிழக எல்லையில், ஆனைமலை அருகே, செம்மணாம்பதியில் உள்ள தென்னந்தோப்பில் சோதனை நடத்தினர்.

தென்னந்தோப்பில், மூன்று இடங்களில் குழி தோண்டி பதுக்கி வைத்திருந்த, 150 கேன்களில் இருந்து, 4,950 லிட்டர் எரிசாராயத்தைக் கண்டுபிடித்தனர். தென்னந்தோப்பு, தமிழகத்துக்கு உட்பட்ட பகுதியில் இருந்ததால், பறிமுதல் செய்த எரிசாராயத்தை, ஆனைமலை போலீசாரிடம் ஒப்படைத்தனர்.

இதுகுறித்து, கேரள கலால் துறை இன்ஸ்பெக்டர் சுரேஷ் கூறும்போது, ''கேரள மாநிலத்தில், தென்னங்கள்ளில் போதைத் தன்மையை அதிகரிக்க, எரிசாராயம் கலப்படம் செய்கின்றனர்,'' என்றார்.

எரிசாராயம் பதுக்கி வைத்திருந்து, தப்பியோடிய நபர் குறித்து, ஆனைமலை போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

தேடப்பட்டவர் மர்ம மரணம்


கேரள கலால் துறையினர், செம்மணாம்பதியில், தென்னந்தோப்பில் எரிசாராயம் பதுக்கிய, கேரள மாநிலம் பெரும்பாவூர் ஒக்கல் பகுதியைச் சேர்ந்த சபீஷ் ஜேக்கப், 41, என்பவரை தேடி வந்தனர். நேற்று காலை செம்மணாம்பதி தோப்பில், விஷம் குடித்து, மயங்கிய நிலையில் கிடந்த அவரை, அப்பகுதியினர் மீட்டு, பாலக்காடு அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அவர் இறந்து விட்டதாக டாக்டர்கள் தெரிவித்தனர். கொல்லங்கோடு போலீசார் விசாரிக்கின்றனர்.



-- நிருபர் குழு -






      Dinamalar
      Follow us