sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், டிசம்பர் 29, 2025 ,மார்கழி 14, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

இந்தியா

/

செம்பை சங்கீத உற்சவம் பாலக்காட்டில் 31ல் துவக்கம்

/

செம்பை சங்கீத உற்சவம் பாலக்காட்டில் 31ல் துவக்கம்

செம்பை சங்கீத உற்சவம் பாலக்காட்டில் 31ல் துவக்கம்

செம்பை சங்கீத உற்சவம் பாலக்காட்டில் 31ல் துவக்கம்


ADDED : ஆக 29, 2024 02:11 AM

Google News

ADDED : ஆக 29, 2024 02:11 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பாலக்காடு:செம்பை வைத்தியநாத பாகவதரின், 128வது பிறந்த நாள் விழாவை முன்னிட்டு, பாலக்காட்டில் இரண்டு நாட்கள் சங்கீத உற்சவம் 31ம் தேதி துவங்குகிறது.

பாலக்காடு செம்பை பார்த்தசாரதி கோவில் கலையரங்கில், 31ம் தேதி மாலை 5:30 மணிக்கு கேரள உயர் நீதிமன்ற நீதிபதி குஞ்சிகிருஷ்ணன், விழாவை துவக்கி வைக்கிறார். தொழிலதிபர் சித்திக் அகமது சிறப்பு விருந்தினராக பங்கேற்கிறார்.

தொடர்ந்து, மாலை 6:25க்கு அபிராம் உண்ணி குழுவினரின் சங்கீத கச்சேரி நடக்கிறது. செப்., 1, காலை 8:15 மணி முதல் இசைக் கலைஞர்களின் சங்கீத ஆராதனை நடக்கிறது. தொடர்ந்து, 11:45 மணிக்கு செம்பை வித்ய பீடத்தின், 38வது ஆண்டு மாநாட்டை, கேரளாவின் ஆலத்துார் எம்.பி., ராதாகிருஷ்ணன் துவக்கி வைக்கிறார்.

தரூர் தொகுதி எம்.எல்.ஏ., சுமோத் தலைமை வகிக்கிறார். பாலக்காடு எம்.பி., ஸ்ரீகண்டன் சிறப்பு விருந்தினராக பங்கேற்கிறார்.

தொடர்ந்து மண்ணுார் ராஜகுமாரன் உண்ணி குழுவினரின் கச்சேரி நடக்கிறது. இரண்டு நாட்கள் நடக்கும் சங்கீத ஆராதனையில், 200க்கும் மேற்பட்ட கலைஞர்கள் பங்கேற்கின்றனர். ஏற்பாடுகளை, செம்பை வித்யா பீடம் தலைவர் செம்பை சுரேஷ், செயலர் கீழத்துார் முருகன் செய்துள்ளனர்.






      Dinamalar
      Follow us