sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

இந்தியா

/

பிகினி உடையில் 'ஷூட்' : தடை விதித்த போலீசார்

/

பிகினி உடையில் 'ஷூட்' : தடை விதித்த போலீசார்

பிகினி உடையில் 'ஷூட்' : தடை விதித்த போலீசார்

பிகினி உடையில் 'ஷூட்' : தடை விதித்த போலீசார்

6


ADDED : ஆக 30, 2024 11:57 PM

Google News

ADDED : ஆக 30, 2024 11:57 PM

6


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

உடுப்பி:

உடுப்பி கடற்கரையில் மாடல் ஒருவர், பிகினி உடையில், போட்டோ ஷூட் நடத்தியதை, போலீசார் தடுத்து நிறுத்தினர். இதனால் அப்பெண் கோபம் அடைந்தார்.

உடுப்பியின், படுகெரே கடற்கரை மிகவும் பிரசித்தி பெற்ற சுற்றுலா தலமாகும். தினமும் ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணியர் வருகின்றனர். நேற்று காலை இங்கு மாடல் பெண் ஒருவர், பிகினி உடையில் போட்டோ ஷூட் நடத்தினார். இதனால் இங்கிருந்த பொது மக்கள், சுற்றுலா பயணியர், தர்மசங்கடத்துக்கு ஆளாகினர். சிலர் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர்.

அங்கு வந்த உடுப்பி போலீசார், போட்டோ ஷூட்டை தடுத்து நிறுத்தினர். பொது இடத்தில் இப்படி நடந்து கொள்ள கூடாது என, அறிவுரை கூறி, மாடலையும், போட்டோ ஷூட் நடத்தியவர்களையும் திருப்பி அனுப்பினர்.

போலீசாரின் செயலுக்கு சிலர் எதிர்ப்பு தெரிவித்தனர். சிலர் நமது கலாசாரத்தை மறப்பது சரியல்ல. போலீசார் நடவடிக்கை எடுத்தது சரிதான் என, பாராட்டினர். போலீசாரின் செயலுக்கு, மாடல் ஆட்சேபம் தெரிவித்துள்ளார்.

இன்ஸ்டாகிராமில் அவர் கூறியுள்ளதாவது:

கடற்கரையில் நான் போட்டோ ஷூட் நடத்திய போது, அங்கு வந்த போலீசார் தடுத்து நிறுத்தினர். வேறு உடை அணியும்படி கூறினர். இதே உடையில் இருந்தால், உள்ளூர்வாசிகள் தாக்குதல் நடத்துவர் என, எச்சரித்தனர்.

கடற்கரை என்பது பொது இடம். இங்கு போட்டோ ஷூட் நடத்தியதில் தவறு என்ன. பிகினி உடை அணிய கூடாது என்ற சட்டம் உள்ளதா.

இவ்வாறு அவர் கூறி உள்ளார்.






      Dinamalar
      Follow us