sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

இந்தியா

/

துாங்குவதை போட்டோ எடுத்த சக ஊழியர் மீது துப்பாக்கிச்சூடு

/

துாங்குவதை போட்டோ எடுத்த சக ஊழியர் மீது துப்பாக்கிச்சூடு

துாங்குவதை போட்டோ எடுத்த சக ஊழியர் மீது துப்பாக்கிச்சூடு

துாங்குவதை போட்டோ எடுத்த சக ஊழியர் மீது துப்பாக்கிச்சூடு


ADDED : மார் 04, 2025 12:21 AM

Google News

ADDED : மார் 04, 2025 12:21 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

இந்துார் : மத்திய பிரதேசத்தில் பணியின் போது துாங்கியதை புகைப்படம் எடுத்த சக ஊழியரை, துப்பாக்கியால் சுட்ட பாதுகாவலரை போலீசார் நேற்று கைது செய்தனர்.

மத்திய பிரதேசத்தின் இந்துாரில் உள்ள பன்வார்குவான் பகுதியில் நகைக் கடை செயல்பட்டு வருகிறது. இங்கு பிரமோத் பாண்டே, 56, என்பவர் பாதுகாவலராக வேலை செய்து வந்தார்.

கடந்த 1ம் தேதி இரவு பணியில் இருந்த போது, இவர் துாங்கியுள்ளார். இதை, நகைக் கடையின் விற்பனை பிரிவில் பணியாற்றும் சஞ்சய் ஜக்தப் என்பவர் தன் மொபைல் போனில் படம் பிடித்துள்ளார். இந்த படத்தை சக ஊழியர்கள் உள்ள வாட்ஸாப் குழுவிலும் அவர் பதிவிட்டுள்ளார்.

இதனால், ஆத்திரம் அடைந்த பிரமோத், நேற்று முன்தினம் நகைக் கடையில் பணியில் இருந்த சஞ்சயிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். இதன் முடிவில், தன்னிடம் இருந்த உரிமம் பெற்ற துப்பாக்கியால் அவரை சுட்டார்.

இதில், கை மற்றும் உடலின் பிற பாகங்களில் காயம் ஏற்பட்டதை அடுத்து மருத்துவமனையில் சஞ்சய் சேர்க்கப்பட்டார்.

சஞ்சய் அளித்த புகாரைத் தொடர்ந்து, பிரமோத்தை கைது செய்த போலீசார், அவரிடம் இருந்த துப்பாக்கியை பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.






      Dinamalar
      Follow us