ராணுவ மருத்துவமனையில் முதல் முறையாக தோல் வங்கி வசதி
ராணுவ மருத்துவமனையில் முதல் முறையாக தோல் வங்கி வசதி
ADDED : ஜூன் 20, 2024 04:03 AM

புதுடில்லி : புதுடில்லி ராணுவ மருத்துவமனையில் முதல் முறையாக, தோல் வங்கி வசதியை அறிமுகப்படுத்தியுள்ளது மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சகம்.
இது, ராணுவ வீரர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினருக்கு ஏற்படும் தீக்காயங்கள் மற்றும் தோல் தொடர்பான பிற நிலைமைகளுக்கு நவீன சிகிச்சை அளிக்க எடுக்கப்படும் முன்னெடுப்பாகும்.
இந்த தோல் வங்கி, நாடுமுழுவதும் உள்ள அனைத்து ராணுவ மருத்துவமனைகளுக்கும், தோல் மருந்துகளை சேகரித்தல், பதப்படுத்துதல், சேமித்தல் மற்றும் வினியோகிக்கும் முக்கிய மையமாக விளங்கும்.
இந்த வங்கியில் பிளாஸ்டிக் அறுவை சிகிச்சை நிபுணர்கள், திசு பொறியாளர்கள், சிறப்பு தொழில்நுட்ப வல்லுநர்கள் உட்பட உயர் பயிற்சி பெற்ற மருத்துவ நிபுணர்கள் கொண்ட குழு பணியாற்றும். இங்கு மிக உயர்ந்த தரக் கட்டுப்பாடு மற்றும் பாதுகாப்பு உறுதி செய்யப்பட்டு, நம்பகமான சிகிச்சை அளிக்கப்படும் என பாதுகாப்புத் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.