sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், டிசம்பர் 22, 2025 ,மார்கழி 7, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

இந்தியா

/

சட்டென்று மாறிய வானிலை... பலத்த காற்றுடன் லேசான மழை பலத்த காற்றுடன் லேசான மழை

/

சட்டென்று மாறிய வானிலை... பலத்த காற்றுடன் லேசான மழை பலத்த காற்றுடன் லேசான மழை

சட்டென்று மாறிய வானிலை... பலத்த காற்றுடன் லேசான மழை பலத்த காற்றுடன் லேசான மழை

சட்டென்று மாறிய வானிலை... பலத்த காற்றுடன் லேசான மழை பலத்த காற்றுடன் லேசான மழை


ADDED : ஏப் 24, 2024 02:13 AM

Google News

ADDED : ஏப் 24, 2024 02:13 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

� புதுடில்லியில் பகல் முழுதும் வெயில் சுட்டெரித்தது. மாலையில் திடீரென பலத்த காற்றுடன் மழை பெய்தது. மழை நீர் வீட்டுக்குள் ஒழுகாமல் இருக்க தன் குடிசையின் மேற்பகுதியை பாலித்தீன் கவரால் மூடும் பெண்.

� கர்தவ்ய பாதையில் மழையை ரசித்தபடி நடந்து சென்ற டில்லிவாசிகள்.  

� தலைநகர் டில்லியில் நேற்று வெப்பநிலை அதிகபட்சமாக 36.8 டிகிரி செல்ஷியஸ் பதிவாகி இருந்தது. பகல் முழுதும் வெயில் சுட்டெரித்த நிலையில், மாலையில் வானிலை சட்டென்று மாறியது. பலத்த காற்றுடன் லேசான மழை பெய்தது. இதனால் வெப்பம் தணிந்து இதமான சூழல் நிலவியது.

சில இடங்களில் செடி மற்றும் மரங்கள் சரிந்தன. மணிக்கு 70 கி.மீ., வேகத்தில் காற்று வீசியது. குடிசைகளில் வசிப்போர் சற்று அச்சம் அடைந்தனர். காலையில் காற்றின் ஈரப்பதம் 28 முதல் 66 சதவீதம் வரை இருந்தது. டில்லியில் இன்றும் பலத்த காற்று வீசும் எனவும், வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும் வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.

புதுடில்லி அருகே ஹரியானா மாநிலத்தின் குருகிராம் மற்றும் பஞ்சாப் மாநிலத்தில் அமிர்தசரஸ் உள்ளிட்ட பகுதிகளில் நேற்று பலத்த மழை பெய்தது. பல இடங்களில் அறுவடைக்கு தயாராக இருந்த கோதுமைப் பயிர்கள் நீரில் மூழ்கின. மழையால் சரிந்து கிடக்கும் கோதுமைப் பயிரை வருத்தத்துடன் பார்க்கும் விவசாயி.






      Dinamalar
      Follow us