திடீர் உடல்நலக்குறைவு: கவிதா மருத்துவமனையில் ‛அட்மிட்'
திடீர் உடல்நலக்குறைவு: கவிதா மருத்துவமனையில் ‛அட்மிட்'
UPDATED : ஜூலை 16, 2024 06:39 PM
ADDED : ஜூலை 16, 2024 06:31 PM

புதுடில்லி: டில்லி மதுபான கொள்கை முறைகேடு வழக்கில் கைதாகி திகார் சிறையில் உள்ள தெலுங்கானா முன்னாள் முதல்வர் சந்திரசேகரராவ் மகள் கவிதா உடல்நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
டில்லி ஆம் ஆத்மி அரசின் புதிய மதுபான கொள்கையில் நடந்த முறைகேட்டை சி.பி.ஐ., அமலாக்கத்துறை விசாரித்து வருகிறது. இதில் தொடர்புடையதாக தெலுங்கானாவின் பாரதிய ராஷ்ட்ரீய சமிதி கட்சியின் கவிதா மீது அமலாக்கத்துறை பணமோசடி வழக்கு தொடர்ந்துள்ளது. சி.பி.ஐ.யும் வழக்குப்பதிவு செய்துள்ளது.
இந்த இருவழக்குகளில் கடந்த மார்ச் 15-ம் தேதி கவிதாவை அமலாக்கத்துறை கைது செய்தது. அவர் திகார் சிறையில் உள்ளார். கடந்த ஏப்ரல் 11ம் தேதி சி.பி.ஐ.யும் திகார் சிறையில் வைத்து கைது செய்தது. இவர் மீதான வழக்கு டில்லி ரோஸ் அவென்யூ கோர்ட்டில் நடைபெற்று வருகிறது.
இந்நிலையில் கவிதா திகார் சிறையில் இன்று திடீரென மயங்கி விழுந்ததாக கூறப்படுகிறது. உடனடியாக டில்லியில் உள்ள தீன்தயாள் உபாத்யாயா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.