ADDED : ஜூலை 04, 2024 02:45 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பெங்களூரு: ம.ஜ.த., -- எம்.எல்.சி., சூரஜ் ரேவண்ணாவும் பரப்பன அக்ரஹாரா சிறையில் அடைக்கப்பட்டார்.
ம.ஜ.த., தொண்டரை பாலியல் பலாத்காரம் செய்த குற்றச்சாட்டில், எம்.எல்.சி., சூரஜ் ரேவண்ணாவை போலீசார் கைது செய்து, தங்கள் கஸ்டடியில் வைத்து விசாரணை நடத்தினர். கஸ்டடி காலம் நேற்று முடிந்ததால், பெங்களூரின், ஏ.சி.எம்.எம்., நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர்.
சூரஜ் ரேவண்ணாவை ஜூலை 18 வரை, சிறை காவலில் வைக்கும்படி நீதிமன்றம் உத்தரவிட்டது. அவர், பரப்பன அக்ரஹாரா சிறையில் அடைக்கப்பட்டார்.
இதே சிறையில், இவரது சகோதரர் பிரஜ்வலும் அடைக்கப்பட்டுள்ளார்.