sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, டிசம்பர் 12, 2025 ,கார்த்திகை 26, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

இந்தியா

/

கடற்படை துணை தளபதியாக சுவாமிநாதன் பொறுப்பேற்பு

/

கடற்படை துணை தளபதியாக சுவாமிநாதன் பொறுப்பேற்பு

கடற்படை துணை தளபதியாக சுவாமிநாதன் பொறுப்பேற்பு

கடற்படை துணை தளபதியாக சுவாமிநாதன் பொறுப்பேற்பு


ADDED : மே 02, 2024 01:14 AM

Google News

ADDED : மே 02, 2024 01:14 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

புதுடில்லி: நம் கடற்படையின் துணைத் தளபதியாக கிருஷ்ணா சுவாமிநாதன் நேற்று பொறுப்பேற்றார்.

நம் கடற்படையின் தலைமை தளபதியாக இருந்த ஹரிகுமாரின் பதவிக்காலம், ஏப்., 30 உடன் முடிவடைந்தது.

இதையடுத்து, நம் கடற்படையின், 26வது தலைமை தளபதியாக, துணைத் தளபதியாக இருந்த தினேஷ் குமார் திரிபாதி, நேற்று முன்தினம் பொறுப்பேற்றார்.

இந்நிலையில், நம் கடற்படையின் துணைத் தளபதியாக கிருஷ்ணா சுவாமிநாதன் நேற்று பொறுப்பேற்றார். இவர், தகவல் தொடர்பு மற்றும் மின்னணு போரில் நிபுணராக உள்ளார்.

கடந்த 1987 ஜூலை 1ல் கடற்படையில் சேர்ந்த கிருஷ்ணா சுவாமிநாதன், கடற்படையில் பல்வேறு பொறுப்புகளை வகித்துள்ளார். ஐ.என்.எஸ்., வித்யுத், ஐ.என்.எஸ்., வினாஷ், ஐ.என்.எஸ்., குலிஷ் ஆகிய ஏவுகணை கப்பல்களில், கட்டளை அதிகாரியாக அவர் பணியாற்றி உள்ளார்.

மேலும், ஏவுகணை அழிப்புக் கப்பலான ஐ.என்.எஸ்., மைசூரு மற்றும் விமானம் தாங்கிக் கப்பலான ஐ.என்.எஸ்., விக்ரமாதித்யாவில் கட்டளை அதிகாரியாக கிருஷ்ணா சுவாமிநாதன் பணிபுரிந்துள்ளார்.

கடற்படையின் துணைத் தளபதியாக பொறுப்பேற்ற உடன், தேசிய போர் நினைவுச் சின்னத்தில் மலர் வளையம் வைத்து அவர் மரியாதை செலுத்தினார்.






      Dinamalar
      Follow us