sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், நவம்பர் 03, 2025 ,ஐப்பசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

இந்தியா

/

வெளிநாட்டில் இருந்து தப்பி வந்த தமிழக மீனவர்கள் உடுப்பியில் மீட்பு

/

வெளிநாட்டில் இருந்து தப்பி வந்த தமிழக மீனவர்கள் உடுப்பியில் மீட்பு

வெளிநாட்டில் இருந்து தப்பி வந்த தமிழக மீனவர்கள் உடுப்பியில் மீட்பு

வெளிநாட்டில் இருந்து தப்பி வந்த தமிழக மீனவர்கள் உடுப்பியில் மீட்பு


ADDED : பிப் 25, 2025 10:44 PM

Google News

ADDED : பிப் 25, 2025 10:44 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

உடுப்பி: மல்பே கடலில் சந்தேகத்துக்கு இடமாக நின்றிருந்த வெளிநாட்டு படகில் இருந்த தமிழர்கள் மீட்கப்பட்டனர்.

உடுப்பி மாவட்டத்தின் மல்பே கடலின் செயின்ட் மேரிஸ் தீவில், நேற்று முன்தினம் வெளிநாட்டு படகு சந்தேகத்துக்கு இடமாக நின்றிருந்தது. இதை கவனித்த மீனவர்கள், உடனடியாக கடலோர பாதுகாப்பு படையினருக்கு தகவல் கொடுத்தனர்.

இதையடுத்து, அங்கு வந்த கடலோர பாதுகாப்பு படையினர், வெளிநாட்டு படகை சோதனையிட்டனர். அதில் மீனவர்கள் இருப்பது தெரியவந்தது. அவர்களிடம் விசாரித்த போது, தமிழகத்தை சேர்ந்தவர்கள் என்பது தெரிந்தது.

இவர்களை குழுவாக மீன் பிடி தொழிலுக்கு, ஓமன் நாட்டுக்கு தொழிலதிபர் அழைத்து சென்றுள்ளார். ஆனால் அவர்களுக்கு சரியான ஊதியம் கொடுக்கவில்லை; உணவும் கொடுக்காமல் வேலை வாங்கி இம்சித்து உள்ளார். இதனால் மீனவர்கள், தப்பி செல்வதற்காக உரிமையாளரின் படகிலேயே புறப்பட்டுள்ளனர்.

ஓமனில் இருந்து கடல் வழியே, 4,000 கி.மீ., பயணித்து, இந்திய கடற்கரைக்கு வந்தனர். உத்தரகன்னடா, கார்வாரை கடந்து உடுப்பியின் மல்பேவை நோக்கி சென்றனர். மல்பேவின் செயின்ட் மேரிஸ் தீவிற்கு வரும் போது, டீசல் காலியானதால் படகு நின்றுவிட்டது. உணவும் இல்லாமல் அவதிப்பட்டு, கடலோர காவல் படையினரால் மீட்கப்பட்டனர்.

பாஸ்போர்ட் இல்லாமல், வெளிநாட்டு படகில் இந்திய எல்லையை தாண்டி வந்ததால், மீனவர்கள் மீது வழக்கு பதிவாகியுள்ளது. அவர்களிடம் தொடர்ந்து விசாரணை நடக்கிறது.






      Dinamalar
      Follow us