நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
புதுடில்லி:வடமேற்கு டில்லியில், இரண்டாவது மாடியில் இருந்து குதித்து இளம்பெண் தற்கொலை செய்து கொண்டார்.
உத்தர பிரதேச மாநிலம் மீரட் நகரைச் சேர்ந்தவர் 29 வயது பெண், 10 ஆண்டுகளாக டில்லியில் தங்கி போட்டித் தேர்வுக்கு படித்து வந்தார். முகர்ஜி நகர் பெண்கள் விடுதியில் தங்கியிருந்த அவர் நேற்று மதியம் 3:00 மணிக்கு, இரண்டாவது மாடியில் இருந்து குதித்தார். ரத்த வெள்ளத்தில் கிடந்த அவர், அருகில் இருந்த மருத்துவமனைக்கு துாக்கிச் செல்லப்பட்டார். பரிசோதனை செய்த டாக்டர்கள், அவர் ஏற்கனவே இறந்து விட்டதை உறுதி செய்தனர்.
தகவல் அறிந்து வந்த போலீசார், உடலை மீட்டு உடற்கூறு ஆய்வுக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
சில மாதங்களாக இந்த விடுதியில் தங்கியிருந்த ார்.
இதுகுறித்து, போலீசார் விசாரித்து வருகின்றனர்.

